X ray
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

பரிசோதனை அறிக்கைக்காக மாதக்கணக்கில் காத்திருக்கும் மக்கள்!!

Share

கொழும்பு தேசிய பல் வைத்தியசாலையில் பல மாதங்களாக ‘எக்ஸ்ரே அட்டைகள் இன்மையால் பரிசோதனை அறிக்கைகளைப் பெறுவதில் நோயாளிகள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கிவருவதாக தெரிவிக்கின்றனர்.

மருத்துவ சிகிச்சைகளுக்காக வரும் நோயாளிகளுக்கு வைத்தியர்கள் ‘எக்ஸ்ரே’ பரிசோதனைக்கு பரிந்துரைத்தாலும் அவற்றை பெற்றுக்கொள்ள முடியாத அவல நிலை காணப்படுவதாக  நோயாளிகள் தெரிவிக்கின்றனர்.

இதுதொடர்பில் கொழும்பு தேசிய பல் வைத்தியசாலை பணிப்பாளர், அஜித் தண்டநாராயணனிடம் வினவிய போது,

சுகாதார வழங்கல் துறையில் சிறிய அளவிலான எக்ஸ்ரே அட்டைகள் முடிவடைந்து பல மாதங்கள் கடந்துவிட்டதாகவும் வௌியில் வாங்குவதற்கு சிறிய அளவிலான எக்ஸ்ரே அட்டைகள் இருப்பில் இல்லாத பிரச்சினை காணப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் கொழும்பு தேசிய பல் வைத்தியசாலையில் அருகில் உள்ள  வைத்தியசாலைகளில்  மீள வழங்குவதாக கூறி சிறிய அளவிலான எக்ஸ்ரே அட்டைகள் பெற்றுக்கொள்ளப்பட்டது.

அந்த வைத்தியசாலைகளிலும் தற்சமயம் சிறிய அளவிலான எக்ஸ்ரே அட்டைகளுக்கு பற்றாக்குறை நிலவுவதாகவும் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 9
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

இலங்கையில் மழை மற்றும் கடும் வெப்பம்: வானிலை ஆய்வு மையத்தின் முக்கிய எச்சரிக்கை!

இலங்கையின் பல மாகாணங்களில் இன்று (ஏப்ரல் 06, 2026) பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை...

world 8
உலகம்செய்திகள்

லெபனானில் இஸ்ரேல் வான் தாக்குதல்: ஈஸ்டர் தினத்தில் 4 வயது குழந்தை உட்பட 7 பேர் பலி!

மத்திய கிழக்கில் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், தெற்கு லெபனானின் கஃபர்ஹதா (Kafr Hatta) கிராமத்தின்...

world 7
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஹோமகமவில் இன்று 12 மணிநேர நீர்வெட்டு!

தற்போது நிலவி வரும் கடும் வறண்ட வானிலை காரணமாக, ஹோமகம மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில்...

world 6
செய்திகள்உலகம்

உள்கட்டமைப்பைத் தாக்கினால் பதிலடி: டிரம்பிற்கு ஈரான் கடும் எச்சரிக்கை!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் கடுமையான மிலிட்டரி அச்சுறுத்தல்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், ஈரானின் உள்கட்டமைப்புகள்...