5 5
இலங்கைசெய்திகள்

இலங்கையில் மக்களுடைய மனிதவுரிமைகள் மீறப்படுகிறது! சரோஜா எம்.பி ஆதங்கம்

Share

இலங்கையில் மக்களுடைய மனிதவுரிமைகள் மீறப்படுகிறது எனவும்,  மனிதவுரிமை என்பது இன, மத உரிமை. அவர்களுக்கு உள்ள அடையாளங்களுக்கான உரிமை என்றும் மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் வலியுறுத்தியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“ பாதுகாப்பான சமுதாயம், அபிவிருத்தி அடைந்த நிலை, சமூக அங்கீகாரம் என்பன எமக்கு தேவைப்படுகிறது.

இவை அனைத்தும் கிடைத்தால் எமது எதிர்கால சந்ததி அச்சம் கொள்ளாது வாழக் கூடிய ஒரு சூழல் உருவாகும்.

இலங்கைத் தேசியம் ஒரு பாதுகாப்பான தேசியமா? இலங்கை மக்கள் அனைவரும் சந்தேசமாக இருக்கின்றார்களா? இலங்கை மக்களுக்கான இலவச கல்வி, சுகாதாரம், போக்குவரத்து, தொழில் வாய்ப்பு, மொழி உரிமை, பேச்சு உரிமை, பொதுப்போக்குவரத்து என்பன கிடைக்கக் கூடியதாக இலங்கை இருக்கிறதா? பெண்கள் பாதுகாப்பாக இருக்கிறார்களா?

இலங்கை பின்தங்கிய ஒரு நாடு. இலங்கையில் மக்களுடைய மனிதவுரிமைகள் மீறப்படுகிறது.

மனிதவுரிமை என்பது இன, மத உரிமை. அவர்களுக்கு உள்ள அடையாளங்களுக்கான உரிமை.

அடிப்படை மனிதவுரிமை என்பதில் உடை, உறையுள், உணவு, அவர்களுக்கான பாதுகாப்பு, சுகாதாரம், பொருளாதாரம் இவை அனைத்துமே இல்லாமல் செய்யப்படுகின்ற முறை இருக்கின்றது.

அதை மாற்ற வேண்டும். அதனை மாற்றுவது கட்டாயமானதாகும். இலங்கையில் 100 இற்கு 51 சதவீதம் பெண்கள்.

வாக்காளர் பட்டியலில் 56 சதவீதம் பெண்கள் உள்ளனர். அரசாங்கத்தின் இந்த நிலைக்கு கூடுதலாக வாக்களித்தவர்கள் பெண்கள். இந்த தலைவிதிக்கு காரணம் பெண்கள்தான்” என கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
articles2F6YDhCB6S7vQDq50VYCJH
இலங்கைசெய்திகள்

கடல்வளம் மற்றும் நீரியல் வளங்கள் பாதுகாப்புக்கு நவீன தொழில்நுட்பம்: அமைச்சர் சந்திரசேகர் உறுதி!

சர்வதேச மீனவர் தினத்தை முன்னிட்டு இன்று கொழும்பு தாமரை கோபுரம் வளாகத்தில் ஆரம்பமான ‘அக்வா பிளான்ட்...

articles2F8wuyhpUNfptSJfoLRtVn
உலகம்செய்திகள்

அணுசக்தி பேச்சுவார்த்தையை மீளத் தொடங்க அமெரிக்காவை வற்புறுத்துமாறு சவுதியிடம் ஈரான் கோரிக்கை!

இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்கள் மற்றும் பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு மத்தியில் தடைபட்டிருந்த அணுசக்தி பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்க...

25 691962050dadd
செய்திகள்உலகம்

லண்டனில் 20,000 சதுர மீற்றர் பரப்பளவில் புதிய சீனத் தூதரகம்: MI5 எச்சரிக்கைக்கு மத்தியிலும் பிரதமர் ஒப்புதல்!

லண்டனில் 20,000 சதுர மீற்றர் பரப்பளவில் புதிய சீனத் தூதரகத்தை அமைக்கும் திட்டத்திற்கு, இங்கிலாந்துப் பிரதமர்...

image eb1947179c
அரசியல்இலங்கைசெய்திகள்

முதல் சந்தர்ப்பத்திலேயே அரசாங்கத்தைக் கவிழ்ப்போம்: எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயல்படும் – நாமல் ராஜபக்ஸ சவால்!

தற்போதைய அரசாங்கத்தை முதல் சந்தர்ப்பத்திலேயே கவிழ்ப்பதற்காக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயல்படும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்...