5 5
இலங்கைசெய்திகள்

இலங்கையில் மக்களுடைய மனிதவுரிமைகள் மீறப்படுகிறது! சரோஜா எம்.பி ஆதங்கம்

Share

இலங்கையில் மக்களுடைய மனிதவுரிமைகள் மீறப்படுகிறது எனவும்,  மனிதவுரிமை என்பது இன, மத உரிமை. அவர்களுக்கு உள்ள அடையாளங்களுக்கான உரிமை என்றும் மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் வலியுறுத்தியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“ பாதுகாப்பான சமுதாயம், அபிவிருத்தி அடைந்த நிலை, சமூக அங்கீகாரம் என்பன எமக்கு தேவைப்படுகிறது.

இவை அனைத்தும் கிடைத்தால் எமது எதிர்கால சந்ததி அச்சம் கொள்ளாது வாழக் கூடிய ஒரு சூழல் உருவாகும்.

இலங்கைத் தேசியம் ஒரு பாதுகாப்பான தேசியமா? இலங்கை மக்கள் அனைவரும் சந்தேசமாக இருக்கின்றார்களா? இலங்கை மக்களுக்கான இலவச கல்வி, சுகாதாரம், போக்குவரத்து, தொழில் வாய்ப்பு, மொழி உரிமை, பேச்சு உரிமை, பொதுப்போக்குவரத்து என்பன கிடைக்கக் கூடியதாக இலங்கை இருக்கிறதா? பெண்கள் பாதுகாப்பாக இருக்கிறார்களா?

இலங்கை பின்தங்கிய ஒரு நாடு. இலங்கையில் மக்களுடைய மனிதவுரிமைகள் மீறப்படுகிறது.

மனிதவுரிமை என்பது இன, மத உரிமை. அவர்களுக்கு உள்ள அடையாளங்களுக்கான உரிமை.

அடிப்படை மனிதவுரிமை என்பதில் உடை, உறையுள், உணவு, அவர்களுக்கான பாதுகாப்பு, சுகாதாரம், பொருளாதாரம் இவை அனைத்துமே இல்லாமல் செய்யப்படுகின்ற முறை இருக்கின்றது.

அதை மாற்ற வேண்டும். அதனை மாற்றுவது கட்டாயமானதாகும். இலங்கையில் 100 இற்கு 51 சதவீதம் பெண்கள்.

வாக்காளர் பட்டியலில் 56 சதவீதம் பெண்கள் உள்ளனர். அரசாங்கத்தின் இந்த நிலைக்கு கூடுதலாக வாக்களித்தவர்கள் பெண்கள். இந்த தலைவிதிக்கு காரணம் பெண்கள்தான்” என கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
04 17
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிசக்தி நெருக்கடியை சமாளிக்க விசேட பொறிமுறை: ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நாட்டு மக்களுக்கு உரை

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் ஏற்பட்டுள்ள உலகளாவிய எரிபொருள் விநியோகத் தடைகளை எதிர்கொள்ள இலங்கை...

03 18
செய்திகள்உலகம்

‘சேவ் அமெரிக்கா’ சட்டமூலம்: ஆதரவளிக்காத செனட்டர்களுக்கு டொனால்டு ட்ரம்ப் கடும் எச்சரிக்கை!

அமெரிக்க வரலாற்றிலேயே மிகவும் தீர்மானமிக்க சட்டமூலமாக அமையவுள்ள ‘சேவ் அமெரிக்கா’ (Save America Act) சட்டமூலத்திற்கு...

02 17
செய்திகள்உலகம்

அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய பணிப்பாளர் இராஜினாமா: ஈரான் போர் குறித்து ட்ரம்பிற்குப் பகிரங்க எச்சரிக்கை

அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மையத்தின் (NCTC) பணிப்பாளர் பதவியிலிருந்து இராஜினாமா செய்துள்ள ஜோசப் கென்ட்,...

01 17
செய்திகள்விளையாட்டு

சென்னை சூப்பர் கிங்ஸ் முன்னாள் வீரர்களைக் கௌரவிக்கின்றது: ஏ.ஆர். ரஹ்மானின் இசை நிகழ்ச்சியுடன் ஒன்றுகூடல்

இந்தியப் பிரீமியர் லீக் (IPL) 2026 தொடர் ஆரம்பமாகவுள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK)...