4 5
இலங்கைசெய்திகள்

இலங்கை பிரதமர் அமெரிக்க துணை ஜனாதிபதியை சந்தித்திருக்க வேண்டும்!

Share

ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்த பரஸ்பர வரிகள் குறித்து விவாதிப்பதற்காக அண்மையில், இந்தியாவுக்கு சென்றிருந்த, அமெரிக்க துணை ஜனாதிபதி; ஜே.டி. வான்ஸை சந்திக்க இலங்கையின் பிரதமர் ஹரிணி அமரசூரிய முயன்றிருக்க வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவில் இருக்கும் போது துணை ஜனாதிபதி வான்ஸுடன் குறைந்தபட்சம் ஒரு மணி நேர சந்திப்பை மேற்கொள்வதற்காக, பிரதமர் அமரசூரிய, இந்திய அரசாங்கத்தின் தலையீட்டை நாடியிருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஒரு நிகழ்வின் போது பேசிய முன்னாள் ஜனாதிபதி, அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் விதித்த வரிகள் உள்ளூர் நிறுவனங்களுக்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும், எனவே பாதகமான தாக்கத்தைக் குறைக்க அரசாங்கம் அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

அதேவேளை இலங்கை மற்றும் உள்ளூர் நிறுவனங்களுக்கு உதவியளிக்க தாம் தயாராக இருப்பதாக இந்தியப் பிரதமர் மோடி முன்னர் குறிப்பிட்டதை கோடிட்டுக்காட்டியுள்ள ரணில் விக்ரமசிங்க, எனவே அரசாங்கம் இந்த விடயத்தில் செயற்பாட்டை காட்ட வேண்டும் என்றும் கோரியுள்ளார்.

Share
தொடர்புடையது
india 17
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பயணித்த அனைவரும் பலி

பாகிஸ்தான் ராணுவத்திற்குச் சொந்தமான ‘Mi-17’ ரக ஹெலிகாப்டர் ஒன்று, பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழுள்ள காஷ்மீரின் முசாபராபாத்...

india 16
உலகம்செய்திகள்

சூரியப் புயல்களில் இருந்து பூமியைப் பாதுகாக்க விண்வெளியில் செயற்கை பிளாஸ்மா கவசம்: விஞ்ஞானிகள் புதிய திட்டம்

சூரியனில் இருந்து வெளியாகும் சக்திவாய்ந்த சூரியப் புயல்கள் (Solar Storms) மற்றும் புவிக்காந்தப் புயல்களினால் பூமியில்...

india 15
உலகம்செய்திகள்

போலி உரிமம் மூலம் 17 ஆண்டுகள் பயணிகள் விமானத்தை இயக்கிய ஏர் கனடா கேப்டன் கைது

ஏர் கனடா (Air Canada) விமான சேவை நிறுவனத்தில் போலி உரிம ஆவணங்களைப் பயன்படுத்தி, சுமார்...

india 13
அரசியல்இலங்கைசெய்திகள்

சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் குறித்து முறையான விசாரணை: நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஆனந்த விஜேபால உறுதி

கடந்த காலங்களில் நாட்டில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் மக்கள் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவங்கள் உள்ளிட்ட...