13 9
இலங்கைசெய்திகள்

மாகாணசபைத் தேர்தல் : வெளியான தகவல்

Share

மாகாணசபைத் தேர்தல் : வெளியான தகவல்

எதிர்வரும் ஜனவரி மாதம் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படும் உள்ளூராட்சி (LG) மன்ற தேர்தலுக்குப் பின்னர் மாகாண சபைத் தேர்தல்கள் 2025 ஆம் ஆண்டு இறுதிக்குள் நடத்தப்படும் என்று ஜனாதிபதியின் ஊடகப் பிரிவின் (PMD) மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாக கொழும்பு ஊடகமொன்று குறிப்பட்டுள்ளது.

கடந்த பத்தாண்டுகளுக்கு முன்னர் 2014 இல் ஊவா மற்றும் தென் மாகாணங்களுக்கும், 2013 இல் வடக்கு மற்றும் வடமேல் மாகாணங்களுக்கும், 2012 இல் கிழக்கு, வடமத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களுக்கும் மாகாண சபை தேர்தல்கள், நடத்தப்பட்டன.

மைத்திரிபால சிறிசேன(Maithripala Sirisena) – ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe)ஆட்சிக் காலத்தில் நாடாளுமன்றத்தில் எல்லை நிர்ணய அறிக்கை நிராகரிக்கப்பட்டதன் காரணமாக, தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களின் பதவிக்காலம் ஐந்தாண்டு காலத்துக்குப் பின்னர் முடிவடைவதற்கு காரணமான தேர்தல்கள் பிற்போடப்பட்டன.

கோவிட் -19 தொற்றுநோய் மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக தேர்தல்கள் மேலும் ஒத்திவைக்கப்பட்டன.

செவ்வாய்க்கிழமை (3) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகள் தொடர்பான ஊடகவியலாளர் சந்திப்பில், மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் இன்னும் உறுதியான தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை என அமைச்சரவைப் பேச்சாளரும் சுகாதார அமைச்சருமான டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ(Nalinda Jayatissa) தெளிவுபடுத்தினார்.

தற்போதுள்ள அரசியலமைப்பின் படியே மாகாண சபைகள் தற்போது பராமரிக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கத்தால் உருவாக்கப்பட்டு வரும் புதிய அரசியலமைப்பில் மாகாண சபைகளின் எதிர்காலப் பாத்திரத்தை தீர்மானிப்பதற்கான பொது ஆலோசனைகளும் உள்ளடக்கப்படும் என்றும் கலாநிதி ஜயதிஸ்ஸ சுட்டிக்காட்டினார்.

எவ்வாறாயினும், புதன்கிழமை (4) இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி உறுப்பினர்களுடனான சந்திப்பின் போது, ​​ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க(Anura Kumara Dissanayake ), மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கான தனது அர்ப்பணிப்பை வெளிப்படுத்தினார்.

Share
தொடர்புடையது
Harini 1200x675px 26 03 25 1000x600 1
செய்திகள்இலங்கை

பல்கலைக்கழகப் பேராசிரியர் மீதான பாலியல் துன்புறுத்தல் புகார்: முறையான விசாரணை நடக்கிறது – பிரதமர் ஹரிணி அமரசூரிய!

வயம்பப் பல்கலைக்கழகத்தில் (Wayamba University) பேராசிரியர் ஒருவர் தனது விடுதியில் மாணவி ஒருவரை வலுக்கட்டாயமாகத் தடுத்து...

25 690903a432341
செய்திகள்இந்தியா

ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு: மங்கோலியாவில் அவசரமாகத் தரையிறங்கியது! 

சான் பிரான்சிஸ்கோவிலிருந்து டெல்லி நோக்கிப் பயணித்த ஏர் இந்தியா (Air India) விமானம் ஒன்று, தொழில்நுட்பக்...

25 69090d80f023d
செய்திகள்உலகம்

தென்சீனக் கடல் பதற்றம்: சீனாவுக்கு எதிராக கனடா, பிலிப்பைன்ஸ் இடையே முக்கியப் பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம் கையெழுத்து!

தென்சீனக் கடலில் சீனாவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை எதிர்கொள்ளும் நோக்கில், கனடாவும் பிலிப்பைன்ஸும் ஒரு முக்கியமான பாதுகாப்பு...

25 6909005a2a5b7
செய்திகள்உலகம்

பிணைக்கைதிகள் உடல்கள் ஒப்படைப்பைத் தொடர்ந்து: 45 பலஸ்தீனர்களின் உடல்களை இஸ்ரேல் விடுவித்தது! 

ஹமாஸிடமிருந்து மூன்று இஸ்ரேலியப் பிணைக்கைதிகளின் உடல்கள் ஒப்படைக்கப்பட்டதைத் தொடர்ந்து, இஸ்ரேல் 45 பலஸ்தீனர்களின் உடல்களை ஒப்படைத்துள்ளதாக...