இலங்கைசெய்திகள்

மாகாணசபைத் தேர்தல் : வெளியான தகவல்

Share
13 9
Share

மாகாணசபைத் தேர்தல் : வெளியான தகவல்

எதிர்வரும் ஜனவரி மாதம் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படும் உள்ளூராட்சி (LG) மன்ற தேர்தலுக்குப் பின்னர் மாகாண சபைத் தேர்தல்கள் 2025 ஆம் ஆண்டு இறுதிக்குள் நடத்தப்படும் என்று ஜனாதிபதியின் ஊடகப் பிரிவின் (PMD) மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாக கொழும்பு ஊடகமொன்று குறிப்பட்டுள்ளது.

கடந்த பத்தாண்டுகளுக்கு முன்னர் 2014 இல் ஊவா மற்றும் தென் மாகாணங்களுக்கும், 2013 இல் வடக்கு மற்றும் வடமேல் மாகாணங்களுக்கும், 2012 இல் கிழக்கு, வடமத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களுக்கும் மாகாண சபை தேர்தல்கள், நடத்தப்பட்டன.

மைத்திரிபால சிறிசேன(Maithripala Sirisena) – ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe)ஆட்சிக் காலத்தில் நாடாளுமன்றத்தில் எல்லை நிர்ணய அறிக்கை நிராகரிக்கப்பட்டதன் காரணமாக, தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களின் பதவிக்காலம் ஐந்தாண்டு காலத்துக்குப் பின்னர் முடிவடைவதற்கு காரணமான தேர்தல்கள் பிற்போடப்பட்டன.

கோவிட் -19 தொற்றுநோய் மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக தேர்தல்கள் மேலும் ஒத்திவைக்கப்பட்டன.

செவ்வாய்க்கிழமை (3) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகள் தொடர்பான ஊடகவியலாளர் சந்திப்பில், மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் இன்னும் உறுதியான தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை என அமைச்சரவைப் பேச்சாளரும் சுகாதார அமைச்சருமான டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ(Nalinda Jayatissa) தெளிவுபடுத்தினார்.

தற்போதுள்ள அரசியலமைப்பின் படியே மாகாண சபைகள் தற்போது பராமரிக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கத்தால் உருவாக்கப்பட்டு வரும் புதிய அரசியலமைப்பில் மாகாண சபைகளின் எதிர்காலப் பாத்திரத்தை தீர்மானிப்பதற்கான பொது ஆலோசனைகளும் உள்ளடக்கப்படும் என்றும் கலாநிதி ஜயதிஸ்ஸ சுட்டிக்காட்டினார்.

எவ்வாறாயினும், புதன்கிழமை (4) இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி உறுப்பினர்களுடனான சந்திப்பின் போது, ​​ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க(Anura Kumara Dissanayake ), மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கான தனது அர்ப்பணிப்பை வெளிப்படுத்தினார்.

Share
Related Articles
26 1
இலங்கைசெய்திகள்

இறுதியாக கிளிநொச்சியில் தமிழ்த் தேசியத் தலைமையை பார்த்தோம் – சிறிதரன் பகிரங்கம்

நாங்கள் இறுதியாக கிளிநொச்சியில் எங்கள் தலைவரை பார்த்தோம். அங்கு தான் பல வரலாறுகளை கற்றோம் என...

28 1
இலங்கைசெய்திகள்

இந்தியாவிலிருந்து கிடைத்த தகவல்! கட்டுநாயக்க விமான நிலையத்தில் திடீர் சோதனை

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட சோதனை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து கிடைத்த தகவலுக்கமையவே இந்த...

27 1
உலகம்ஏனையவைசெய்திகள்

15 மணிநேர செய்தியாளர் சந்திப்பை நடத்தி சாதனை நிகழ்த்தியுள்ள மாலைத்தீவின் ஜனாதிபதி

மாலைத்தீவு ஜனாதிபதி முகமது முய்சு(Mohamed Muizzu )கிட்டத்தட்ட 15 மணி நேரமாக செய்தியாளர் சந்திப்பு ஒன்றை...

29
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது..! உளறியவருக்கு சுமந்திரன் பதிலடி

ஒருவர் யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது என்கின்றார். இதற்கு முன்னர் இரண்டு இலட்சம் மக்கள்தான் நாட்டின் சனத்தொகை...