14 11
இலங்கைசெய்திகள்

2025 இல் அதிஷ்டத்தில் திளைக்க போகும் அந்த ராசிக்காரர்கள் யார் தெரியுமா !

Share

2025 இல் அதிஷ்டத்தில் திளைக்க போகும் அந்த ராசிக்காரர்கள் யார் தெரியுமா !

இன்னும் சில வாரங்களில் 2025 ஆம் ஆண்டில் நுழையவுள்ள நிலையில் ஒவ்வொருவரின் வாழ்க்கையும் ஒவ்வொரு ஆண்டில் வேறுபட்டிருக்கும்.

இதில் முக்கியமாக அனைவரும் தெரிந்து கொள்ள விரும்புவது தொழில் குறித்துதான் ஏனெனில் தொழில் சிறப்பாக இருந்தால் தானே வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.

ஆனால், வருகின்ற 2025 ஆம் ஆண்டில் சிறப்பாகவும் மற்றும் மகிழ்ச்சிகரமாகவும் இருக்கப் போகின்ற அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பது குறித்து இந்த பதிவில் காணலாம்.

1. சிம்மம்
சிம்ம ராசியின் ஏழாவது வீட்டில் சனி சூரிய சேர்க்கை நிகழவுள்ளது.
இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு பெரிய அளவில் ஜாக்பாட் அடிக்க வாய்ப்புள்ளது.
ஒவ்வொரு துறையிலும் வெற்றி கிடைக்கும்.
சூரியனின் ஆசியால் மதிப்பும், மரியாதையும் அதிகரிப்பதோடு, தன்னம்பிக்கையும் அதிகரிக்கும்.
சிலருக்கு புதிய வருமான ஆதாரங்கள் திறக்கப்படலாம்.
வியாபாரிகளுக்கு நிறைய லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது.
பயணங்களால் நல்ல நிதி நன்மைகள் கிடைக்கும்.
திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் தேடி வரலாம்.

2. விருச்சிகம்
விருச்சிக ராசியின் நான்காவது வீட்டில் சனி சூரிய சேர்க்கை நிகழவுள்ளது.
இதனால் இந்த ராசிக்காரர்கள் ஆடம்பரமான வாழ்க்கையை வாழ்வார்கள்.
புதிய சொத்து, வாகனம், வீடு வாங்கும் கனவு நனவாகும்.
பணிபுரிபவர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமான காலமாக இருக்கும்.
நண்பர்களின் முழு ஆதரவு கிடைக்கும்.
நிறைய பணத்தை சம்பாதிக்கும் வாய்ப்புக்கள் தேடி வரும்.
சமூகத்தில் நிலை உயரும்.
பெற்றோருடனான உறவு சிறப்பாக இருக்கும்.

3. ரிஷபம்
ரிஷப ராசியின் பத்தாவது வீட்டில் சனி சூரிய சேர்க்கை நிகழவுள்ளது.
இதனால் வேலை மற்றும் வியாபாரத்தில் நிறைய நன்மைகள் கிடைக்கும்.
எதிர்பாராத நிதி நன்மைகளைப் பெறவும் வாய்ப்புள்ளது.
பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் சிறப்பான செயல்திறனால் நல்ல வெற்றியைப் பெறுவார்கள்.
வணிகர்கள் ஏராளமான ஆர்டர்களைப் பெற வாய்ப்புள்ளது.
இதன் விளைவாக நிதி நிலையில் நல்ல உயர்வு ஏற்படும் வாய்ப்புள்ளது.
நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். நிறைய பணத்தை சேமிக்க முடியும்.
காதல் மற்றும் திருமண வாழ்க்கை இனிமையாக இருக்கும்.

Share
தொடர்புடையது
சுரேஷ் சலேbyjtujtu
இலங்கை

சுரேஷ் சலேவை மயக்க நிலையில் வைத்து தீவிர விசாரணைக்கு உட்படுத்த முயற்சி!

ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பாக விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் புலனாய்வுத் தலைவர் சுரேஷ் சலே பரிசோதனைக்கு...

குழந்தையினை கைவிட்டு
இலங்கை

குழந்தையினை கைவிட்டு தப்பியோடிய தாய் – தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ள காவல்துறையினர்.

கண்டி – வத்தேகம நகரில் தனது நான்கு வயது குழந்தையை முச்சக்கர வண்டியில் வந்த தாயொருவர்...

Featured mm
இலங்கை

பெக்கோ சமன் தாயார் படுகொலை – பின்னணியில் பழிவாங்கும் படலம்!

பூஸா அதிஉயர் பாதுகாப்புச் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பெக்கோ சமன் என்ற நிர்மல பிரசங்க என்பவரின்...

Arrest 13
இலங்கை

இலகுவாக வீடு கட்டிக்கொள்ளலாம் – தவணைமுறையில் பணம் பெற்று பலரிடம் மோசடி செய்த நபர் கைது.

வீடு கட்டித் தருவதாகக் கூறி சமூக வலைத்தளங்கள் ஊடாக பல்வேறு நபர்களிடம் பெருந்தொகை பணத்தை மோசடி...