5 14
இலங்கைசெய்திகள்

கடவுச்சீட்டு பிரச்சினைக்கு இரண்டு மாதங்களில் தீர்வு

Share

கடவுச்சீட்டு பிரச்சினைக்கு இரண்டு மாதங்களில் தீர்வு

24 மணிநேரமும் கடவுச்சீட்டுக்களை விநியோகம் செய்வதன் மூலம் கடவுச்சீட்டு வரிசையை படிப்படியாக இரண்டு மாதங்களில் குறைக்க முடியும் என பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால (Ananda Wijepala) தெரிவித்துள்ளார்.

குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகளுக்கு இடையில் நேற்று(07.02.2025) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்மூலம், நாளொன்றுக்கு 4,000 கடவுச்சீட்டுக்களை வழங்க முடியும் என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் ஓய்வுபெற்ற பணியாளர்களை மூன்று வேலை நேரங்களில் பயன்படுத்துவதன் மூலம் இந்தத் திட்டத்தினை செயற்படுத்த முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, கடவுச்சீட்டு பெற வரும் மக்களின் பாதுகாப்பிற்காக திணைக்களத்திற்குள் புதிய பொலிஸ் சோதனைச் சாவடியை நிறுவுவதற்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
Retirement
இலங்கை

ஓய்வு வயது தொடர்பில் அரசாங்கம் வெளியிட்ட தகவல்!

  ஓய்வுபெறும் வயதில் மாற்றம் செய்வது தொடர்பாக பல்வேறு தரப்பினரிடமிருந்து கோரிக்கைகள் தற்போது பெறப்பட்டு வருவதோடு,...

traffic
இலங்கை

மோசமான சாதனையினை பதிவு செய்தது ஸ்ரீ லங்கா!

  உலகின் போக்குவரத்து நெரிசல் குறித்த Numbeoவின் 2026ஆம் ஆண்டுக்கான இடைக்கால அறிக்கை இவ்வாறு பட்டியலிடப்பட்டுள்ளது....

k d
இலங்கை

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை.

இலங்கை மக்களுக்கு பலத்த காற்று தொடர்பான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மத்திய, சப்ரகமுவ, வடமத்திய மற்றும் வடமேல்...

G.L.Peiris
இலங்கை

அனைத்து மக்களும் ஒன்றிணைந்தால் சாத்தியம் என்கிறார் முன்னாள் அமைச்சர் ஜி.எல்.பீரிஸ்

கூட்டு எதிரணியின் அரசியல் பிரமுகர்கள் சர்வமதத் தலைவர்களைச் சந்தித்து கலந்துரையாடி வருகின்றனர், இந்த நிலையில் இது...