24 6639bea2af649
இலங்கைசெய்திகள்

வடிகாலிலிருந்து பெறப்பட்ட பொதி : வேலைவாய்ப்பு மோசடி

Share

வடிகாலிலிருந்து பெறப்பட்ட பொதி : வேலைவாய்ப்பு மோசடி

கொழும்பு(Colombo) – மகரகம பகுதியில் உள்ள வடிகால் ஒன்றிலிருந்து 180 கடவுச்சீட்டுக்கள் அடங்கிய பை ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த கடவுச்சீட்டுக்களை மகரகமயில் (Maharagama) உள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் ஒன்று பெற்றுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

மேலும், இந்த நிறுவனத்தின் உரிமையாளர் சுமார் 500 கோடி ரூபாவை மோசடி செய்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

அவர், வெளிநாடுகளில் வேலைவாய்ப்புக்களை தேடுபவர்களிடமிருந்து 260 மில்லியன் ரூபா பணத்தினை பெற்றுள்ளார்.

இதனை தொடர்ந்து, நிறுவன உரிமையாளர் பணத்தை மோசடி செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், இது குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...