2022 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டம் வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் 18 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இன்று காலை வலி.மேற்கு – சுழிபுரம் பிரதேச சபையின் வரவு செலவுத்திட்ட கூட்டமானது தவிசாளர் தர்மலிங்கம் நடனேந்திரன் தலைமையில் சபையின் பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.
சபையில் வரவு செலவுத்திட்டத்தின் மீதான விவாதங்கள் இடபெற்று, 18 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.
25 உறுப்பினர்களை கொண்ட வலிகாமம் மேற்கு பிரதேச சபையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் 9 உறுப்பினர்களும், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் 5 உறுப்பினர்களும், ஐக்கிய தேசியக் கட்சியின் 3 உறுப்பினர்களும் மற்றும் சுயேட்சை குழுவின் 2 உறுப்பினர்கள் உள்ளடங்களாக 19 உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்தனர்.
இவ்வரவு செலவு திட்டத்திற்கு எதிராக ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் ஒரு உறுப்பினர் வாக்களித்தார்.
ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் 4 உறுப்பினர்களும், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஒரு உறுப்பினரும் சபை அமர்வில் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
#SriLankaNews
Leave a comment