12 1 scaled
இலங்கைசெய்திகள்

14 மாதங்களில் நாடாளுமன்றில் நிறைவேற்றிய சட்டங்கள் தொடர்பில் ரணில் விளக்கம்

Share

14 மாதங்களில் நாடாளுமன்றில் நிறைவேற்றிய சட்டங்கள் தொடர்பில் ரணில் விளக்கம்

நாட்டின் பொருளாதார மாற்றத்திற்கு வசதியாக கடந்த 14 மாதங்களில் நாடாளுமன்றம் 42 புதிய சட்டங்களை இயற்றியுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இளம் சட்ட வல்லுனர்களுடன் சட்ட சீர்திருத்தங்கள் தொடர்பான உரையாடலின்போதே அவர் இதனை கூறியுள்ளார்.

அவர் மேலும் கூறியதாவது,

“இந்த நிலையில் நடப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடரில் இதை நிறைவேற்ற முடியாவிட்டால், அடுத்த கூட்டத்தொடரில் யோசனைகள் ஒப்புதலுக்காக மீண்டும் அறிமுகப்படுத்தப்படும்.

1977 ஆம் ஆண்டு முன்கொண்டு வரப்பட்ட ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தனவின் திறந்த பொருளாதாரத்திற்கு வசதியாக புதிய சட்டங்களை அறிமுகப்படுத்து முக்கியமானவதாகும்.

நாட்டின் விரைவான பொருளாதார மாற்றத்திற்கு அத்தகைய சட்டம் மிகவும் முக்கியமானது. அத்துடன் கல்வித்துறையிலும் பல புதிய சட்டங்கள் அறிமுகப்படுத்தபடவுள்ளன.

இந்தச் சட்டமியற்றும் முயற்சிகளைத் தடுக்கும் முயற்சிகள் இருந்தன எனினும்சட்டங்கள் நிறைவேற்றப்பட்டவுடன் நாடாளுமன்றத்தின் அதிகாரத்தை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அவற்றை யாரும் செல்லாததாக்கவோ அல்லது மறைமுகமாகத் தடுக்கவோ முடியாது.

1972 அரசியலமைப்பில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளபடி இறுதி அதிகாரம் நாடாளுமன்றத்திற்குள் மட்டுமே உள்ளது.

இந்தச் செயற்பாடுகளை மனித உரிமை மீறல்கள் என முத்திரை குத்துவதற்கு சிலர் முனைகின்றனர். எனினும் முதன்மையான மனித உரிமை நாட்டு மக்களின் வாழ்வதற்கான உரிமை, இரண்டாவதாக இளைஞர்களுக்கு நம்பிக்கைக்குரிய எதிர்காலத்தை ஏற்படுத்துவது ஆகும்.

கடனை நீண்டகாலமாக நம்பியிருந்தமையே பொருளாதார வீழ்ச்சிக்கு பிரச்சினைக்கான காரணம்.

இந்தக் கடனைத் திறம்பட நிர்வகிக்கத் தவறியதால், வருமானம் இல்லாததால், நிதிக் கடமைகளைச் சமாளிக்க முடியாமல் போனதால், நாடு வீழ்ச்சி கண்டது “என குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம்
இலங்கை

நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம் உயர்த்தப்பட்டுள்ளதா?

அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில்...

Wei Huaxiang
இலங்கை

புதிய சீனத்தூதுவர் இலங்கைக்கு விஜயம்.

இலங்கைக்கான புதிய சீனத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள வெய் ஹுவாசியாங் (Wei Huaxiang) தமது பதவியைப் பொறுப்பேற்பதற்காக...

வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்
இலங்கை

முல்லைத்தீவில் திடீரென வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்!

இன்று காலை, திடீரென அதிகரித்த கடற்சீற்றம், முல்லைத்தீவு மாவட்டத்தில் காரணமாக கடல்நீர் கரையைத் தாண்டி மீனவர்களின்...

Eelam Refugees
இலங்கை

இந்தியாவிலிருந்து நாடு திரும்பும் அகதிகளுக்கான அறிவித்தல்!

யுத்த காலத்தில் இலங்கையிலிருந்து சட்டவிரோதமான முறையில் இந்தியாவுக்கு இடம்பெயர்ந்து, தற்போது ஐக்கிய நாடுகள் அகதிகள் உயர்ஸ்தானிகராலயத்தின்...