image f18d1ef75a
அரசியல்இலங்கைசெய்திகள்

இலங்கைக்கு கரம்கொடுக்க தயாராகும் பாரிஸ் கிளப்

Share

இலங்கைக்கான கடன் உதவி குறித்த உத்தரவாதங்களை சர்வதேச நாணய நிதியத்துக்கு வழங்க பாரிஸ் கிளப் தயாராக உள்ளது என்று ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் 2.9 பில்லியன் டொலர் பிணையெடுப்பைத் திறப்பதற்கு இதுவொரு முக்கிய படி என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நெருக்கடியால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு கடன் மறுசீரமைப்புக்கான தனது ஆதரவை விரைவில் பாரிஸ் கிளப் அறிவிக்க உள்ளதாக பெயர் குறிப்பிட விரும்பாதவர் தெரிவித்துள்ளதாக ரொய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.

கடந்த செப்டம்பரில் சர்வதேச நாணயதியத்துடன் பணியாளர் மட்ட ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட முக்கிய இருதரப்பு கடன் வழங்குபவர்களிடமிருந்து நிதி உத்தரவாதம் தேவைப்படுகிறது.

நவம்பர் மாதம் முதளீட்டாளர்களுக்கு வெளியிடப்பட்ட தரவுகளுக்கு அமைய இலங்கையின் பொதுக் கடன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 122 சதவீதமாக காணப்படுவதுடன், அதில் 70 சதவீதம் வெளிநாட்டு நாணயத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாரிஸ் கிளப் அல்லாத உறுப்பினர்களான சீனாவும் இந்தியாவும் இருதரப்பு கடன் வழங்குவதில் முன்னணியில் உள்ளதுடன், பாரிஸ் கிளப்பின் உத்தரவாதம் சீனாவை நம்பியிருக்கவில்லை என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நாணய நிதிய திட்டத்தின் ஒரு பகுதியாக இலங்கையின் கடன் சுமையை குறைக்க உதவுவதற்கு இந்தியா முன்னர் உறுதியளித்த நிலையில், சீனாவின் எக்சிம் வங்கியும்  இரண்டு வருட கால அவகாசத்தை வழங்குவதாக அண்மையில் அறிவித்தது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 10 4
செய்திகள்இலங்கை

தனியார் துறை ஊழியர்களுக்கும் ஓய்வூதியம்? அரசாங்கம் புதிய திட்டம் குறித்து ஆலோசனை!

தனியார் துறை ஊழியர்களின் எதிர்கால நலனைக் கருத்திற்கொண்டு அவர்களுக்குப் புதிய ஓய்வூதியத் திட்டமொன்றை (Pension Scheme)...

sajith
செய்திகள்இலங்கை

நாடாளுமன்றத்தில் பரபரப்பு: பெண் ஊழியர் துன்புறுத்தல் அறிக்கை ஏன் மறைக்கப்படுகிறது? சஜித் பிரேமதாச கேள்வி!

நாடாளுமன்ற பெண் ஊழியர்கள் எதிர்கொண்ட பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பான விசாரணை அறிக்கை, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படாமல்...

செய்திகள்இலங்கை

இலங்கை மின்சார சபை மறுசீரமைப்பு இறுதிக்கட்டத்தில்! ஊழியர்களின் நலன்களுக்கு முக்கியத்துவம் என அறிவிப்பு!

நாட்டின் எதிர்கால மின்சாரத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நோக்கில் திட்டமிடப்பட்டுள்ள இலங்கை மின்சார சபையின் (CEB)...

96b6d210 5408 11ef b8c3 f76c0a5f70a8.jpg
செய்திகள்உலகம்

யுனுஸின் ஆட்சி சட்டவிரோதமானது! – இந்தியாவிலிருந்து ஷேக் ஹசீனா விடுத்த முதல் பகிரங்க அறிக்கை!

கடந்த 2024-ஆம் ஆண்டு பங்களாதேஷில் ஏற்பட்ட மக்கள் புரட்சியைத் தொடர்ந்து நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில்...