tamilni 255 scaled
இலங்கைசெய்திகள்

கனடாவில் இருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்ட பொதியில் அதிர்ச்சி

Share

கனடாவில் இருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்ட பொதியில் அதிர்ச்சி

இலங்கைக்கு பொதியாக அனுப்பி வைக்கப்பட்டிருந்த சுமார் 60 மில்லியன் ரூபா பெறுமதியான குஷ் எனும் ஆபத்தான போதைப்பொருள் சுங்க வருமான கண்காணிப்பு பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இலங்கையின் கனேமுல்ல பிரதேசத்தில் வசிக்கும் நபரொருவரின் முகவரிக்கு கனடாவிலிருந்து 6 கிலோ போதைப்பொருள் அனுப்பப்பட்டுள்ளதாக இலங்கை சுங்க அதிகாரசபை தெரிவித்துள்ளது.

நேற்று மதியம் ஒருகொடவத்தை வருமான கண்காணிப்பு பிரிவு ஆய்வு கூடத்தில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

குறித்த போதைப்பொருள் பொதியின் உரிமையாளர் சார்பாக வந்த முகவர் ஒருவரும் சுங்கப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு அனுப்பப்பட்ட குஷ் போதைப்பொருள் அடங்கிய பொதி கடந்த மாதம் 25ஆம் திகதி இலங்கைக்கு கிடைத்துள்ளது.

இதனையடுத்து சந்தேகத்தின் அடிப்படையில் சுங்க அதிகாரிகள் அதனை சோதனைக்கு உட்படுத்தியுள்ளனர்.

சோதனையின் போது, ​​கொள்கலனில் பொதி போன்று கவனமாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த குஷ் என்ற போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டதென சுங்கப் பேச்சாளர் சீவாலி அருக்கொட தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
5 1
உலகம்செய்திகள்

காசா மீது வீசப்பட்ட 230 கிலோ குண்டு! இஸ்ரேலின் போர்க்குற்றம் அம்பலம்

காசாவில் பிரபல கடற்கரை விடுதி ஒன்றில் இஸ்ரேல் MK-82 என்ற 230 கிலோ எடை கொண்ட...

4 1
இலங்கைசெய்திகள்

செம்மணியில் கொடூரமாக கொன்று புதைக்கப்பட்ட பிஞ்சு குழந்தைகள்: அரசு தரப்பின் அதிரடி அறிவிப்பு

செம்மணி – சித்துபாத்தி மனிதப் புதைகுழி விவகாரம் தொடர்பில் முன்னெடுக்கப்படும் வழக்கு விசாரணைகளுக்கு அரசாங்கத்தின் சார்பில்...

1
உலகம்செய்திகள்

செம்மணி மனித புதைகுழி விவகாரம் : கனடாவில் இருந்து வந்த கோரிக்கை

செம்மணி மனித புதைகுழியில் எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளமை தமிழ் இனப்படுகொலை இடம்பெற்றது என்பதை சர்வதேசம் அங்கீகரிக்கவேண்டும், பொறுப்புக்கூறல்...

3 1
உலகம்செய்திகள்

செம்மணி விவகாரத்திற்கு சர்வதேச விசாரணை வேண்டும்.. பிரித்தானிய எம்பி கோரிக்கை

கிருஷாந்தி குமாரசாமியின் படுகொலை விடயத்தில் தொடர்புடையவர்கள் தண்டிக்கப்பட்டது போல் செம்மணி மனித புதைகுழியுடன் தொடர்புடையவர்களை கண்டறிய...