கருணாநிதி எனக்கு அரசியல் ஆசான்! குஷ்பூ பேச்சால் குழப்பத்தில் பாஜக
ஏனையவை

கருணாநிதி எனக்கு அரசியல் ஆசான்! குஷ்பூ பேச்சால் குழப்பத்தில் பாஜக

Share

கருணாநிதி எனக்கு அரசியல் ஆசான்! குஷ்பூ பேச்சால் குழப்பத்தில் பாஜக

நான் பாஜகவில் இருந்தாலும் கருணாநிதி தான் எனக்கு அரசியல் ஆசான் என்று தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பூ பேசியது பாஜகவினரிடையே அதிருப்தியையும், குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2010 ஆம் ஆண்டு கருணாநிதி மற்றும் பெரியார் மீது கொண்ட பற்று காரணமாக நடிகை குஷ்பூ தன்னை திமுகவில் இணைத்துக் கொண்டார். பின்பு, சில காரணங்களால் திமுகவில் இருந்து விலகி 2014 ஆம் ஆண்டு காங்கிரசில் இணைந்தார்.

இதனையடுத்து அவர் காங்கிரசில் இருந்து விலகி பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டார். அங்கு, அவருக்கு தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவி வழங்கப்பட்டது.

இதனிடையே அவர், திமுக மீது பல்வேறு விமர்சனங்களை வைத்து பேசியுள்ளார். அதே போல், திமுகவும் குஷ்புவை கடுமையான விமர்சனம் செய்து வந்தது. தற்போது, ஒட்டு மொத பாஜகவும் திமுகவை விமர்சித்து தான் பேசி வருகின்றன.

திமுக ஒரு ஊழல் கட்சி, குடும்ப கட்சி என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை பாஜக வைத்து வருகிறது.

இந்நிலையில் நடிகையும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பூ, “நான் பாஜகவில் இருந்தாலும் கருணாநிதி எனக்கு எப்போதும் அரசியல் ஆசான். அவரை பற்றி பேச வேண்டும் என்றால் நாள் முழுக்க பேசிக் கொண்டிருப்பேன். நான் திமுகவில் இருந்து வந்தவர்.

அதனால், அவரை பற்றி எனக்கு நன்றாக தெரியும்” என்று கூறியுள்ளார். தற்போது, குஷ்பூ பேசிய பேச்சு பாஜகவினர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
6 14
ஏனையவை

வெலிகந்தையில் பிள்ளையானின் சித்திரவதை முகாம் கண்டுபிடிப்பு – விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள்

வெலிகந்தையில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் (பிள்ளையான்) சித்திரவதை முகாம் இருந்த இடத்தை குற்றப்...

12 8
ஏனையவைஇலங்கைசெய்திகள்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை விரைவுபடுத்த உதவுமாறு ஐ.நா ஆணையாளரிடம் வலியுறுத்தல்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை விரைவுபடுத்தப்பட வேண்டும் என ஐ.நாவின் ஆணையாளரிடம் வலியுறுத்தியுள்ளதாக குரலற்றவர்களின் குரல்...

11 6
ஏனையவைஇலங்கைசெய்திகள்

கொடிகாமம் – பரந்தன் இடையே குறுந்தூர பேருந்து சேவை

கொடிகாமம் சந்தி தொடக்கம் பரந்தன் சந்தி வரையிலுமான குறுந்தூர பயணிகள் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது. ஏ-9 வீதியில்...

9 5
ஏனையவைஇலங்கைசெய்திகள்

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக விவகாரம் : அரசாங்கத்தை தலையிடுமாறு கோரிக்கை

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் வெளிவாரி பட்டப்படிப்பு மற்றும் விரிவாக்கப்பட்ட பாடநெறி பிரிவின் கல்வி நடவடிக்கைகளை மீண்டும்...