sri lanka gold
இலங்கைசெய்திகள்

பராலிம்பிக் – இலங்கைக்கு முதல் தங்கம்

Share

டோக்கியோவில் இடம்பெற்றுவரும்  பராலிம்பிக்  2020 போட்டிகளில் இலங்கை முதலாவது தங்கப் பதக்கத்தை சுவீகரித்துள்ளது.

உலகம் முழுவதும் மாற்றுத் திறனாளிகளின் திறன்களை வெளிப்படுத்தும் 16 ஆவது பராலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த ஓகஸ்ட் 24 ஆம் திகதி முதல் நடைபெற்று வருகின்றன.

இந்தப் போட்டியில் 162 நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் பங்குபற்றினர். இலங்கை சார்பாக 9 வீரர்கள் கலந்துகொண்டனர்.

அவர்களில் F46 ஈட்டி எறிதல் போட்டியில் கலந்துகொண்ட இலங்கை வீரர் தினேஸ் பிரியந்த ஹேரத் உலக சாதனை படைத்து இலங்கை சார்பாக முதல் தங்கப் பதக்கத்தை பெற்றுக்கொடுத்துள்ளார்.

இவர் 67.79 மீற்றர் தூரத்துக்கு ஈட்டி எறிந்து இந்த தங்கப் பதக்கத்தை சுவீகரித்துள்ளார். இந்தப் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தையும் வெண்கலப் பதக்கத்தையும் இந்திய வீரர்கள் கைப்பற்றினர்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
8556906 vijay
செய்திகள்இந்தியா

மாவீரர் தினத்தில் ‘தமிழ்த் தேசியத்திற்காகப் போராடிய மாவீரர்களை வணங்குவோம்’: தளபதி விஜய் நினைவுகூர்ந்து பதிவு!

தமிழ் மக்களின் விடுதலைக்காகப் போராடி வீர மரணமடைந்த மாவீரர்களை, தமிழ்த் வெற்றிக் கழகத்தின் (Tamilaga Vettri...

images 2 4
செய்திகள்இந்தியா

வெள்ளைக்கொடியுடன் சரணடைந்தவர்கள் எங்கே? சர்வதேசத்தின் மௌனம் ஏன்? சீமான் கேள்வி

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யைத் தொடர்ந்து, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானும் மாவீரர்...

images 12
செய்திகள்இலங்கை

டிட்வா புயல் திருகோணமலையிலிருந்து 50 கி.மீ தெற்கே மையம்; செட்டிக்குளத்தில் 315 மி.மீ அதிகபட்ச மழைவீழ்ச்சி பதிவு!

நாட்டில் நிலவும் மோசமான காலநிலைக்கான காரணமான ‘டிட்வா’ (DITWA) புயல் குறித்த முக்கியத் தகவலை வளிமண்டலவியல்...

Flood
செய்திகள்இலங்கை

அத்தனகலு ஓயாவைச் சுற்றியுள்ள தாழ்வான பகுதிகளில் பெரும் வெள்ள அபாயம்: மக்கள் உடனடியாக வெளியேற அறிவுறுத்தல்!

நாட்டில் நிலவி வரும் மோசமான வானிலை காரணமாக, அத்தனகலு ஓயாவைச் (Attanagalu Oya) சுற்றியுள்ள தாழ்வான...