images 2 1 2
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

யாழிலும் பாணின் விலை குறைப்பு!

Share
யாழ்ப்பாண மாவட்டத்தில் இன்று வெள்ளிக்கிழமை முதல் ஒரு இறாத்தல் பாணின் விலையினை பத்து ரூபாய் குறைத்து 160 ரூபாயாக விற்பனை செய்ய தீர்மானித்துள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட கூட்டுறவு வெதுப்பக உற்பத்தியாளர் சங்கத் தலைவர் க.குணரட்ணம் தெரிவித்தார்.
இன்று யாழ்ப்பாணத்தில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தற்பொழுது நாட்டில் பாண் உற்பத்திக்கு தேவையான பொருட்களின் விலை குறைவடைந்தமையையடுத்து எமது சங்கம் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.
பாண்  உற்பத்திக்கு மா, டீசல் என்பன பின்னிப்பிணைந்தது. தற்பொழுது டீசலின் விலையும் கோதுமை மாவின் விலையும் குறைக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக நாங்கள் பாணின் விலையினை யாழ்ப்பாண மாவட்டத்தில் குறைப்பதற்கு தீர்மானித்துள்ளோம்
 சாதாரண வறுமைக்குட்பட்ட மக்களுக்கு பாண் ஒரு பிரதானமான உணவு.எனவே சாதாரண பொதுமக்கள் அன்றாடம் தமது உணவினை பெற வேண்டும் என்பதற்காக  பானின் விலையினை குறைப்பதற்கு தீர்மானித்துள்ளோம்
அத்தோடு முதல் கட்டமாக  இந்த பாணின் விலையினை குறைப்பதற்கு தீர்மானித்து உள்ளோம். குறிப்பாக ஏனைய பேக்கரி   உற்பத்தி பொருட்களின் விலையை நாங்கள் சடுதியாக குறைக்க முடியாது.
ஆனால் அதுவும் விரைவில்  குறைக்கவுள்ளோம். எனினும் முதல் கட்டமாக யாழ் மாவட்டத்தில் பாணின் விலையினை பத்து ரூபாய் குறைப்பதற்கு தீர்மானித்துள்ளோம் .
எமது இலாபத்தினை குறைத்து பொதுமக்களுக்கான சேவை நோக்கமாக முதல் கட்டமாக இந்த விலை குறைப்பினை மேற்கொண்டுள்ளோம் -என்றார்.
#srilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
MediaFile 4 2
விளையாட்டுசெய்திகள்

உலகக் கிண்ணப் போட்டிகள்: இந்தியப் பிரதிநிதிக்கு விசா மறுப்பு! பங்களாதேஷின் அதிரடி முடிவால் ஐசிசி அதிர்ச்சி.

இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரை முன்னிட்டு, இந்தியா மற்றும் பங்களாதேஷ் நாடுகளுக்கு இடையே நிலவும்...

24 674091ff36e1e
செய்திகள்இலங்கை

அரச துறைக்கு 75,000 புதிய ஊழியர்கள்: ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அதிரடி அறிவிப்பு!

நாட்டின் அரச நிர்வாகக் கட்டமைப்பை வலுப்படுத்தும் நோக்கில், அரச துறைக்கு புதிதாக 75,000 ஊழியர்களை இணைத்துக்கொள்ள...

1715871834 1715869628 pakis L
செய்திகள்இலங்கை

சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை: 11 ஆண்டுகளில் 46,000-க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் விசாரிக்கப்படவில்லை!

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு (National-Child-Protection-Authority) சிறுவர்களுக்கு நடந்த மோசமான செயற்பாடுகள் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளில்...

iran 1
உலகம்செய்திகள்

ஈரானில் உக்கிரமடையும் மக்கள் போராட்டம்: 5,000 பேர் உயிரிழப்பு – இணையம் துண்டிப்பு, ஆயிரக்கணக்கானோர் கைது!

ஈரானில் நிலவி வரும் கடும் பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் குழப்பங்களுக்கு எதிராக கடந்த மாதம்...