21 615e02cd7630e
இலங்கைசெய்திகள்

பண்டோரா  விவகாரம் – நடேசனிடம் விசாரணை

Share

பண்டோரா ஆவண விவகாரம் தொடர்பாக வாக்குமூலம் வழங்குவதற்காக, திருக்குமரன் நடேசன் லஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் ஆஜரானார்.

முன்னாள் பிரதி அமைச்சரான நிரூபமா ராஜபக்ஷவின் கணவரான திருக்குமரன் நடேசன், பண்டோரா ஆவண விவகாரம் தொடர்பாக வாக்குமூலம் வழங்குவதற்காக, லஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் இன்று ஆஜரானார்.

இன்று முற்பகல் ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்ததாக, ஆணைக்குழுவின் செயலாளர் அப்சரா கல்தேரா அறிவித்திருந்த நிலையில், இன்று திருக்குமரன் நடேசன் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் ஆஜரானார்.

அண்மையில் வெளியான பண்டோரா ஆவணங்களில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள இலங்கையர்கள் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பிக்குமாறு, ஜனாதிபதி இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு உத்தரவிட்டிருந்த நிலையில், இன்று, வாக்குமூலம் ஒன்றை பெற்றுக்கொள்வதற்காக ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு திருக்குமரன் நடேசனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்று காலை லஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் திருக்குமரன் நடேசன் ஆஜராகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 692fae9358269 1
செய்திகள்இலங்கை

அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்குப் பற்றாக்குறை இல்லை: அமைச்சர் வசந்த சமரசிங்க உறுதி!

நாட்டில் அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்குப் பற்றாக்குறை இல்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது. பேரிடர் சூழ்நிலை காரணமாக...

image aef113ab57 1
செய்திகள்இலங்கை

ஹட்டன் – கொழும்பு வீதி மீண்டும் திறப்பு: பஸ் சேவைகள் ஆரம்பம்!

நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக மண்சரிவு மற்றும் மண்மேடுகள் சரிந்து விழுந்ததால் பாதிக்கப்பட்டிருந்த ஹட்டன்...

1740048123351
செய்திகள்இலங்கை

அனர்த்தத்தின் பெயரால் நிதி மோசடி: நுவரெலியாவில் பணம் வசூலிக்கும் மோசடிக்காரர்கள் குறித்து அவதானம் தேவை!

நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் மண்சரிவு உட்பட இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, சில நபர்கள்...

000 86jq4zl
செய்திகள்இலங்கை

இலங்கையில் புதிய சூறாவளி வதந்தி பொய்: டிச. 4-5இல் லேசான மழைக்கே வாய்ப்பு – வளிமண்டலவியல் திணைக்களம்!

இலங்கையில் வரும் நாட்களில் புதிய சூறாவளி ஏற்பட வாய்ப்புள்ளதாகப் பரவி வரும் வதந்திகள் தவறானவை என்று...