பண்டோரா ஆவண விவகாரம் தொடர்பாக வாக்குமூலம் வழங்குவதற்காக, திருக்குமரன் நடேசன் லஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் ஆஜரானார்.
முன்னாள் பிரதி அமைச்சரான நிரூபமா ராஜபக்ஷவின் கணவரான திருக்குமரன் நடேசன், பண்டோரா ஆவண விவகாரம் தொடர்பாக வாக்குமூலம் வழங்குவதற்காக, லஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் இன்று ஆஜரானார்.
இன்று முற்பகல் ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்ததாக, ஆணைக்குழுவின் செயலாளர் அப்சரா கல்தேரா அறிவித்திருந்த நிலையில், இன்று திருக்குமரன் நடேசன் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் ஆஜரானார்.
அண்மையில் வெளியான பண்டோரா ஆவணங்களில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள இலங்கையர்கள் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பிக்குமாறு, ஜனாதிபதி இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு உத்தரவிட்டிருந்த நிலையில், இன்று, வாக்குமூலம் ஒன்றை பெற்றுக்கொள்வதற்காக ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு திருக்குமரன் நடேசனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இன்று காலை லஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் திருக்குமரன் நடேசன் ஆஜராகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Leave a comment