21 615e02cd7630e
இலங்கைசெய்திகள்

பண்டோரா  விவகாரம் – நடேசனிடம் விசாரணை

Share

பண்டோரா ஆவண விவகாரம் தொடர்பாக வாக்குமூலம் வழங்குவதற்காக, திருக்குமரன் நடேசன் லஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் ஆஜரானார்.

முன்னாள் பிரதி அமைச்சரான நிரூபமா ராஜபக்ஷவின் கணவரான திருக்குமரன் நடேசன், பண்டோரா ஆவண விவகாரம் தொடர்பாக வாக்குமூலம் வழங்குவதற்காக, லஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் இன்று ஆஜரானார்.

இன்று முற்பகல் ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்ததாக, ஆணைக்குழுவின் செயலாளர் அப்சரா கல்தேரா அறிவித்திருந்த நிலையில், இன்று திருக்குமரன் நடேசன் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் ஆஜரானார்.

அண்மையில் வெளியான பண்டோரா ஆவணங்களில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள இலங்கையர்கள் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பிக்குமாறு, ஜனாதிபதி இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு உத்தரவிட்டிருந்த நிலையில், இன்று, வாக்குமூலம் ஒன்றை பெற்றுக்கொள்வதற்காக ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு திருக்குமரன் நடேசனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்று காலை லஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் திருக்குமரன் நடேசன் ஆஜராகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
21 1
இலங்கைசெய்திகள்

விபத்துக்குள்ளான கெப் ரக வாகனம்

புல்மோட்டையிலிருந்து சென்ற கெப் வாகனம் புடவைக்கட்டில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (23) அதிகாலை 04:35 மணியளவில் புல்மோட்டையில்...

19 2
இலங்கைசெய்திகள்

மூதூர் பிரதேச சபை இலங்கை தமிழரசுக் கட்சி வசம்!

திருகோணமலை – மூதூர் பிரதேச சபைக்கான, தவிசாளர் மற்றும் உதவி தவிசாளர் தெரிவு இன்று(23) கிழக்கு...

20
இலங்கைசெய்திகள்

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (23) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர்...

22 1
உலகம்செய்திகள்

அமெரிக்க நகரங்களில் ட்ரம்பிற்கு எதிராக போராட்டத்தில் குதித்த மக்கள்

ஈரான்(IRAN) மீதான தாக்கு தலை கண்டித்தும் போரை உடனே நிறுத்த வேண்டும் என்றும் அமெரிக்காவில்(USA) பல்வேறு...