வாய்த்தர்க்கம் முற்றியதால் கொலையில் முடிந்த அவலம்
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கம் முற்றியதால் கொலையில் முடிந்த அவலம்

Share

வாய்த்தர்க்கம் முற்றியதால் கொலையில் முடிந்த அவலம்

கொழும்பு – பாணந்துறையில் நண்பர்கள் இருவருக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் மோதலாக மாறியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பாணந்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பாணந்துறை – வாழை சந்தைக்கு முன்பாக நேற்றையதினம்(24.07.2023) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவத்தில் உயிரிழந்தவர் பாணந்துறை – கெசல்வத்த கல்லுபர பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய மொஹமட் ஆஷிஸ் மொஹமட் அக்ரம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் மோதலில் பலத்த காயமடைந்தவரை வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற நிலையில் அவர் அங்கு உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் உயிரிழந்தவர் உடல்நிலை பாதிக்கப்பட்டவர் எனவும் கூறப்படுகிறது.

முச்சக்கரவண்டி தரிப்பிடத்தில் வாகனத்தை நிறுத்த அனுமதி பெறுவது தொடர்பாக இருவருக்கும் இடையே நடந்த பேச்சு வார்த்தையே பின்னர் மோதலாக மாறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதற்கமைய தாக்குதல் நடத்தியவர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பாணந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered 12
சினிமாசெய்திகள்

ஷங்கர் – விக்ரம் சந்திப்பு..! கூட்டணி இணைய வாய்ப்புள்ளதா..?

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குநர் ஷங்கர் சமீபத்தில் இயக்கிய அனைத்து படங்களும் ரசிகர்கள் மத்தியல் நல்ல...

17512685620
இலங்கைசெய்திகள்

அரசியலில் என்ட்ரியா..! ரஹ்மான் இணை அமைச்சரை சந்தித்ததன் பின்னணி என்ன..?

இந்திய சினிமாவின் இசைமேதை, இசையின் உலகநாயகர் ஏ.ஆர். ரஹ்மான், சமீபத்தில் மத்திய இணை அமைச்சர் எல்....

Untitled 1 Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered 11
சினிமாசெய்திகள்

சினிமாவுக்கு வெளியேயும் தல சாம்பியன் தான்..! அஜித் ரேஸிங் அணிக்கு கிடைத்த வெற்றி மகுடம்..!

தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோவாக மட்டுமல்லாது கார் ரேஸராகவும் மக்களை ஆச்சரியப்படுத்துபவர் தான் நடிகர் அஜித்...

17512832932
சினிமாசெய்திகள்

சினிமா துறையில் போதைப்பொருள் குறித்த பின்னணி!நேர்காணலில் பைல்வான் ரங்கநாதன் கருத்து!

தமிழ் சினிமா துறையில் இடம்பெற்றுள்ள போதைப்பொருள் தொடர்பான அண்மைய சம்பவங்கள், சினிமா உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன....