24 6621f01b3b0eb
இலங்கைசெய்திகள்

இறுதிப் பயணம் இப்படித்தான் இருக்க வேண்டும்: பாலித தெவரப்பெருமவின் ஆசை

Share

இறுதிப் பயணம் இப்படித்தான் இருக்க வேண்டும்: பாலித தெவரப்பெருமவின் ஆசை

மறைந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் பாலித தெவரப்பெருமவின் இறுதி கிரியைகள் இன்று இடம்பெறவுள்ளதுடன் அவரது இறுதி விருப்பப்படி அவர் தயாரித்த கல்லறையில் அவரின் உடல் அடக்கம் செய்யப்படவுள்ளது.

மின்சாரம் தாக்கியமையினால் உள்ளுறுப்புகளில் ஏற்பட்ட பலத்த சேதம் காரணமாகவே பாலித தெவரப்பெருமவின் மரணம் சம்பவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தநிலையில், முன்னாள் இராஜாங்க அமைச்சர் பாலித தெவரப்பெருமவின் இறுதிக்கிரியை இன்று மத்துகமை, யட்டதொலவத்த பகுதியில் இடம்பெறவுள்ளதாக அவரது குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

இதன்படி பாலித தெவரப்பெரும உயிருடன் இருக்கும் போது தாமே தயாரித்த கல்லறையில் அவரது உடல் அடக்கம் செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தனது இறுதிப்பயணம் எவ்வாறு அமைய வேண்டும் என அவர் கூறிய காணொளி ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

பாலித தெவரப்பெரும தான் இறப்பதற்கு முன்னரே தனக்கான கல்லறையையும் கட்டிவைத்துள்ளார்.

அவர் தனது கடைசி ஆசையாக தான் இறந்த பின் அதிக பணச் செலவில் மரண பெட்டியை வாங்க வேண்டாம் எனவும், அந்த பணத்தை ஊரில் உள்ள சிறார்களுக்கு புத்தகம், உணவு என்பன வழங்குமாறு குடும்பத்தாரிடம் கூறியுள்ளதாக தெரியவருகிறது.

அத்துடன் இரேஷா ஹேமமாலி எழுதிய பாடல் ஒன்றை சில வார்த்தைகளை மாற்றி பாலித்த தெவரப்பெரும பாடல் ஒன்றை எழுதியுள்ளார்.

இந்த பாடலை பாடியபடி தனது இறுதி ஊர்வலம் அமையவேண்டும் என்பதுதான் தெவரப்பெரும விருப்பம் எனவும் கூறப்படுகிறது. அத்தோடு இறுதி பயணத்தில் தன்னை தூக்கிச் செல்பவர்களுக்கும் அவர் பணம் செலுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவர் எழுதியுள்ள பாடல்வரிகள்,
இன்றும் வழக்கமான பாதையில் தான் செல்கிறேன், ஆனால் இது வேறு பயணம் மகனே……
நான் தனியாக வந்த பிறகு பலர் வருகிறார்கள்……
என்றும் எனது பாரத்தை உன் தோளில் நான் இறக்கியதில்லை மகனே…..
பாரம் அதிகம் என்றால், தரையில் வை… மகனே… உன் தோள் வலிக்கும்…..
என் தோட்டத்தில் ஏரிக்கு அருகில் கல்லறை ஒன்றை நானே கட்டினேன், என் சிறிய மகனே …..
எனது தனிமைக்கு துணையாய் நாளை காலை மூத்த மகனை நான் தேடிக்கொள்வேன்……
இயற்கையின் விதியை நான் கடைப்பிடித்து செல்கிறேன்….
போகும் வழியில் என்னிடம் இருக்கும் மருந்து சீட்டுகளை எடுத்து சென்று அம்மாவிடம் கொடு…….

Share
தொடர்புடையது
image 2025 12 02 093823108
இலங்கைசெய்திகள்

முல்லைத்தீவு கடற்படை வீரர்கள் விபத்து: காணாமல் போன 5 பேரில் ஒருவரின் உடலம் மீட்பு!

அதிதீவிர வானிலைக் காரணமாக முல்லைத்தீவு சாலை முகத்துவாரப் பகுதியில், மணலை அகற்றி விரிவுபடுத்தும் பணியின்போது, கடந்த...

IMG 4676
இலங்கைசெய்திகள்

லுணுவில ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்த விமானிக்கு விடை: பட்டச் சான்றிதழ் பூதவுடலுக்கு சமர்ப்பிப்பு!

அண்மையில் லுணுவில பகுதியில் நிவாரணப் பணிக்காகச் சென்றபோது விபத்துக்குள்ளாகி உயிரிழந்த இலங்கை விமானப்படையின் விங் கமாண்டர்...

25 68663a41415fd
இலங்கைசெய்திகள்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவின் பேரிடர் நிர்வாகத்தை அரசாங்கம் ஆய்வு செய்ய வேண்டும்: நாமல் ராஜபக்ச!

பேரிடர் சூழ்நிலையை நிர்வகிக்க அரசாங்க இயந்திரம் இன்னும் தயாராக இல்லை என்று சுட்டிக்காட்டிய சிறிலங்கா பொதுஜன...

MediaFile 4
இலங்கைசெய்திகள்

வட்டியில்லா மாணவர் கடன்: விண்ணப்பக் காலக்கெடு டிசம்பர் 15 வரை நீடிப்பு!

வட்டியில்லா மாணவர் கடன் திட்டத்தின் 10வது கட்டத்திற்கான விண்ணப்பக் காலக்கெடு 2025.12.15 ஆம் திகதி வரை...