இலங்கை பிரஜை ஒருவர் பாக்கிஸ்தானில் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் அந்நாட்டு அரசாங்கம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ச கோரிக்கை விடுத்துள்ளார்.
இதனையே இலங்கை அரசாங்கமும் மக்களும் எதிர்பார்த்து இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்டுள்ள விசேட அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் சம்பவத்தோடு தொடர்புடைய நபர்களை உடனடியாக கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் நடவடிக்கை எடுத்துள்ளமை பாராட்டத்தக்கது எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
#SriLankaNews
Leave a comment