14 23
இலங்கைசெய்திகள்

கோப் குழுவை புறக்கணிக்க எதிர்க்கட்சி தீர்மானம்

Share

நாடாளுமன்றத்தின் அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவை (COPE) புறக்கணிக்க எதிர்க்கட்சி தீர்மானித்துள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா இதனைத் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற கோப் குழுவுக்கு தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமிப்பதில் காணப்பட்ட மரபுகளை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மீறியுள்ளது.

கோப் குழுத் தலைவர் பதவிக்கு நிஷாந்த சமரவீரவை, அரசாங்கம் ஆளுங்கட்சி உறுப்பினர்களின் ஆதரவுடன் நியமித்துக் கொண்டுள்ளது.

இவ்வாறாக நாடாளுமன்ற சம்பிரதாயங்களை மீறி நாடாளுமன்ற குழுக்களுக்கு தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமிக்கும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் நிலைப்பாட்டுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், கோப் உள்ளிட்ட நாடாளுமன்றக் குழுக்கள் அனைத்தையும் புறக்கணிப்பது தொடர்பில் எதி்ர்க்கட்சி தீர்மானமொன்றை மேற்கொண்டுள்ளதாக அஜித் பீ. பெரேரா குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
21 1
இலங்கைசெய்திகள்

விபத்துக்குள்ளான கெப் ரக வாகனம்

புல்மோட்டையிலிருந்து சென்ற கெப் வாகனம் புடவைக்கட்டில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (23) அதிகாலை 04:35 மணியளவில் புல்மோட்டையில்...

19 2
இலங்கைசெய்திகள்

மூதூர் பிரதேச சபை இலங்கை தமிழரசுக் கட்சி வசம்!

திருகோணமலை – மூதூர் பிரதேச சபைக்கான, தவிசாளர் மற்றும் உதவி தவிசாளர் தெரிவு இன்று(23) கிழக்கு...

20
இலங்கைசெய்திகள்

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (23) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர்...

22 1
உலகம்செய்திகள்

அமெரிக்க நகரங்களில் ட்ரம்பிற்கு எதிராக போராட்டத்தில் குதித்த மக்கள்

ஈரான்(IRAN) மீதான தாக்கு தலை கண்டித்தும் போரை உடனே நிறுத்த வேண்டும் என்றும் அமெரிக்காவில்(USA) பல்வேறு...