14 23
இலங்கைசெய்திகள்

கோப் குழுவை புறக்கணிக்க எதிர்க்கட்சி தீர்மானம்

Share

நாடாளுமன்றத்தின் அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவை (COPE) புறக்கணிக்க எதிர்க்கட்சி தீர்மானித்துள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா இதனைத் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற கோப் குழுவுக்கு தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமிப்பதில் காணப்பட்ட மரபுகளை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மீறியுள்ளது.

கோப் குழுத் தலைவர் பதவிக்கு நிஷாந்த சமரவீரவை, அரசாங்கம் ஆளுங்கட்சி உறுப்பினர்களின் ஆதரவுடன் நியமித்துக் கொண்டுள்ளது.

இவ்வாறாக நாடாளுமன்ற சம்பிரதாயங்களை மீறி நாடாளுமன்ற குழுக்களுக்கு தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமிக்கும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் நிலைப்பாட்டுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், கோப் உள்ளிட்ட நாடாளுமன்றக் குழுக்கள் அனைத்தையும் புறக்கணிப்பது தொடர்பில் எதி்ர்க்கட்சி தீர்மானமொன்றை மேற்கொண்டுள்ளதாக அஜித் பீ. பெரேரா குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
Shooting 3
இலங்கை

இன்றைய தினம் நாட்டில் மற்றுமொரு துப்பாக்கிச்சூடு.

இன்று மாலை, கொழும்பு – தெமட்டகொடை, குப்பியாவத்தை மயானத்திற்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில்...

Shooting 2
இலங்கை

காவல்துறை உத்தியோகத்தரின் மீது துப்பாக்கி பிரயோகம்.

பெலியத்த, வலவல பகுதியில், திக்வெல்ல காவல் நிலையத்தில் கடமைற்றும் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவரின் வீட்டின் மீது...

dead body 1
இலங்கை

நீரில் மூழ்கிய சிறுவன் சடலமாக மீட்பு.

நேற்று மாலை, கம்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெலிகல்ல – உடோவிட்ட பகுதியில், நான்கு சிறுவர்கள் இணைந்து...

low r 2
இலங்கை

க.பொ.த உயர்தரப் பரீட்சை பிற்போட படுமா? – நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு.

இவ்வருடம் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு முதலாம் மற்றும் இரண்டாம் தடவைகளாகத் தோற்றவுள்ள மாணவர் குழுவொன்றினால் தாக்கல்...