444
இலங்கைசெய்திகள்

எதிர்க்கட்சி – ஆளும்கட்சி நடுவீதியில் மோதல்

Share

நாவலப்பிட்டி ஜயதிலக மைதானத்தில் அமைக்கப்பட்டு வருகின்ற நடைபாதை தொடர்பில் கண்காணிக்க அங்கு வருகை தந்த எதிர்க்கட்சி மற்றும் ஆளும்கட்சி உறுப்பினர்களுக்கு இடையே இன்று கைகலப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நடைபாதை 20 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்டு வருகிறது எனவும் இதனைப் பார்வையிட நகர சபையின் முன்னாள் தவிசாளர், ஐக்கிய மக்கள் சக்தியின் நாவலப்பிட்டி தொகுதி அமைப்பாளர், நாவலப்பிட்டி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மற்றும் அவர்களது ஆதரவாளர்கள் எனப் பலர் அங்கு வந்திருந்தனர்.

எனினும் மைதானத்துக்குள் நுழையும் பிரதான வாயில் நகர சபையால் மூடப்பட்டுள்ளதால் அவர்கள் மைதானம் அருகில் காத்திருந்தனர்.

இந்த நிலையில் நாவலப்பிட்டி நகர சபை தற்போதைய தவிசாளர் உள்ளிட்டவர்கள் சம்பவ இடத்துக்கு வருகை தந்த போது இருதரப்பினருக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டு இறுதியில் கைகலப்பு மோதலாக மாறியுள்ளது.

இவர்களின் அடிதடியை கட்டுப்படுத்த அங்கு பொலிஸார் வருகை தந்ததன் பின்னரும் கூட இரு தரப்பினரிடையே மோதல் தொடர்ந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் இரு தரப்பினரும் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ள நிலையில் ஐக்கிய மக்கள் சக்தியின் ஆதரவாளர்கள் மூவர் காயமடைந்து வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

ddd 1

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
articles2FY0GVgzTw5z9g03mi2iHS
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பொலன்னறுவையில் கொடூரம்: கோடரித் தாக்குதலுக்குள்ளான 17 வயதுச் சிறுமி உயிரிழப்பு!

பொலன்னறுவை மாவட்டம் தம்பால பகுதியில் பக்கத்து வீட்டு இளைஞனால் கோடரியால் தாக்கப்பட்ட 17 வயதுடைய பாடசாலை...

26 6982fe7a72190
செய்திகள்உலகம்

எப்ஸ்டீன் விவகாரம்: பிரித்தானிய பிரபுக்கள் சபையிலிருந்து பீட்டர் மெண்டல்சன் அதிரடி விலகல்!

  பிரித்தானியாவின் முன்னாள் அமைச்சரும், அமெரிக்காவிற்கான முன்னாள் தூதருமான பீட்டர் மெண்டல்சன் (Peter Mandelson) மீது...

english lokshahi 2026 02 04 1vn53foh Mumbai
செய்திகள்இந்தியா

மும்பை விமான நிலையத்தில் நடுக்கம்: இரண்டு ஏர்பஸ் விமானங்கள் மோதி விபத்து!

இந்தியாவின் மிக முக்கியமான விமான நிலையங்களில் ஒன்றான மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான...

image 26ca8f03e9
செய்திகள்அரசியல்இலங்கை

இந்த அரசாங்கம் மேல்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்தது அல்ல – நம்பிக்கையூட்டும் வாசுதேவ நாணயக்கார!

தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகள் மற்றும் அதன் பின்னணி குறித்து முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார நேற்று...