அரசியல் இலாபத்துக்காகவே மாநாட்டை எதிரணி புறக்கணிப்பு! – சுமந்திரன் சாட்டையடி

sumanthiran

“சர்வகட்சி மாநாட்டில் எதிர்க்கட்சிகள் பங்கேற்காமை தவறான முடிவாகும். அரசியல் இலாபத்துக்காகவே அந்தக் கட்சியினர் இந்த முடிவை எடுத்திருக்கக்கூடும்.”

– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

”அரசமைப்பின் பிரகாரம் தற்போது ஜனாதிபதித் தேர்தலை நடத்த முடியாது. இந்த விடயம் கூட சஜித் பிரேமதாஸவுக்குத் தெரியவில்லை” என்றும் அவர் கூறினார்.

“ஜனாதிபதியுடனான சந்திப்பின்போது நாம் அரசியல் தீர்வு பற்றியே பேச்சு நடத்துவோம்” என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

#SriLankaNews

Exit mobile version