நாடாளுமன்றில் 65 பேர் மட்டுமே மக்களுக்காக உள்ளனர் எனவும், 148 பேர் ராஜபக்சக்களுடனேயே தற்போதும் உள்ளனர் எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.
நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய அவர்,
“நாடாளுமன்றில் நடத்தப்பட்ட, நடத்தப்படும் நாடகங்கள் இன்று வெளிச்சத்துக்கு வந்துள்ளன.
ஏனென்றால், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டியவைத் தெரிவு செய்வார்கள் என்று நான் நினைக்கவில்லை.
ரஞ்சித் சியம்பலாப்பிட்டியவுக்கு வாக்களித்து, அவரைப் பிரதி சபாநாயகராகத் தெரிவு செய்த 148 பேரும் தற்போதும் ராஜபக்சக்களுடனேயே இருக்கின்றனர்.
எனவே, அவரை எதிர்த்துப் போட்டியிட்ட இம்தியாஸ் பாக்கிர் மார்க்கருக்கு வாக்களித்த 65 பேர் மட்டுமே மக்கள் பக்கம் உள்ளனர்.
நாடாளுமன்றத்தில் என்ன நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட்டாலும் இங்குள்ள நாடககாரர்கள், பொய்யர்கள் அதற்கு எதிராகவே வாக்களிப்பார்கள். ஏனென்றால் அவர்களுக்கு ராஜபக்சக்களைப் காப்பாற்ற வேண்டும்” – என்றார்.
#SriLankaNews