நாட்டில் தற்போது இணையம் மூலமான பாலியல் துர்நடத்தை நடவடிக்கைகள் அதிகரித்துள்ளன என பாதுகாப்பு அமைச்சின் செயலர் ஜெனரல் கமால் குணரத்ன தெரிவித்துள்ளார்.
இவ் விடயம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டில் ஒன்லைன் விபச்சார விளம்பரத்தில் ஈடுபட்டுள்ள அனைவரையும் தேடும் நடவடிக்கைகள் மிக்கது துரித கதியில் இடம்பெற்று வருகின்றன, கைதாகும் அனைவரும் சட்டத்தின் முன் ஆஜர்படுத்தப்படுவார்கள் – என்றார்.
மேலும், கொரோனாத் தொற்றைத் தடுக்கும் திட்டத்தில் அணுசக்தி, உயிரியல் மற்றும் இரசாயனப் போர் ஆகியவற்றில் அதிக நிபுணத்துவம் பெற்ற இராணுவ மருத்துவ அதிகாரிகளையே நியமித்துள்ளோம் – எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
Leave a comment