12 7
செய்திகள்இலங்கை

இணையவழி விருந்து: போதைப்பொருட்களுடன் 12 நபர்கள் கைது!

Share

சுற்றுலா விடுதியொன்றில் இருந்து போதைப்பொருட்களுடன் 12 சந்தேக நபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வெலிகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மிதிகம பிரதேசத்தில் உள்ள சுற்றுலா விடுதியொன்றில் நேற்று (21) இரவு இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சுற்றுலா விடுதியில் இணையத்தின் ஊடாக விருந்தொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளிலிருந்து தெரியவருகிறது.

பொலிஸாரால் சந்தேக நபர்களிடமிருந்து 01 கிராம் 625 மில்லி கிராம் கொக்கெய்ன் போதைப்பொருளும், 01 கிராம் ஐஸ் போதைப்பொருளும், மூன்று கிராம் 600 கிராம் கேரள கஞ்சா மற்றும் 2 கிராம் 25 கிராம் க்ரூஸ் போதைப்பொருளும், ஒரு கிராம் 700 மில்லிகிராம் ஹேஸ் ரக போதைப்பொருளுடன் கைப்பற்றப்பட்டுள்ளது.

சந்தேகநபர்கள் 30 முதல் 45 வயதுக்குட்பட்டவர்கள் எனவும், அம்பாறை, தல்பே, மெதகம, மாத்தறை, தனமல்வில, திஸ்ஸமஹாராம மற்றும் கோனபினுவெல ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரியவருகிறது.

நேற்றைய தினம் மாத்தறை நீதவான் நீதிமன்றில் சந்தேகநபர்கள் ஆஜர்படுத்தப்பட்டு எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மாத்தறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

 

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
40
உலகம்செய்திகள்

போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்ட இந்திய – பாகிஸ்தான்..! ட்ரம்ப் வெளியிட்ட தகவல்

இந்தியாவும் பாகிஸ்தானும் உடனடி போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக...

37
இலங்கைசெய்திகள்

இலங்கையில் கடவுச்சீட்டு பெற மீண்டும் நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்

பத்தரமுல்ல குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் தலைமை அலுவலகத்திற்கு அருகில் நேற்று முதல் நீண்ட வரிசைகள்...

38
இலங்கைசெய்திகள்

மொட்டு கட்சியில் மாற்றம்..! முக்கிய பதவிக்கு புதிய நியமனம்

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் செயற்பாட்டு பிரதானி பதவிக்கு முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ...

36
இலங்கைசெய்திகள்

கொட்டாஞ்சேனை மாணவி விவகாரம்: பிரதமர் தலைமையில் முக்கிய சந்திப்பு Prime Minister Meeting Kotahena Student Death

கொட்டாஞ்சேனையில் தவறான முடிவெடுத்து உயிரிழந்த மாணவி தொடர்பிலான விசாரணைகளை விரைவுபடுத்துமாறு பிரதமர் ஹரிணி அமரசூரிய, பொலிஸ்...