rtjy 67 scaled
இலங்கைசெய்திகள்

இலங்கையை விட்டு வெளியேறிய ஒரு இலட்சம் பேர்

Share

இலங்கையை விட்டு வெளியேறிய ஒரு இலட்சம் பேர்

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் இலங்கையிலிருந்து வேலைவாய்ப்புக்காக வெளிநாடுகளுக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறி லங்கா வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பிரதி பொது முகாமையாளர் காமினி செனரத் யாப்பா இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கையின் பொருளாதார நெருக்கடி காரணமாக இளைஞர்கள், தாய்மார் உள்ளிட்ட பலர் வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்புக்காக சென்றுள்ளனர். இவ்வாறாக வேலைவாய்ப்புக்காக செல்லும் பலர் மத்திய கிழக்கு நாடுகளுக்கு சென்றுள்ளதாக சிறி லங்கா வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பிரதி பொது முகாமையாளர் காமினி செனரத் யாப்பா சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், இந்த வருடத்தின் இறுதிக்கு முன்னதாக மூன்று இலட்சத்துக்கும் மேற்பட்டோர் இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்புக்காக செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும்,சிறி லங்கா வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவுகளை மேற்கொண்டு வெளிநாடுகளுக்கு செல்வோர் குறித்து மாத்திரம் தாம் அறிந்திருப்பதாகவும், பணியகத்தில் பதிவுகளை மேற்கொள்ளாமல் செல்வோர் தொடர்பான புள்ளிவிவரங்கள் இல்லையெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
india 17
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பயணித்த அனைவரும் பலி

பாகிஸ்தான் ராணுவத்திற்குச் சொந்தமான ‘Mi-17’ ரக ஹெலிகாப்டர் ஒன்று, பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழுள்ள காஷ்மீரின் முசாபராபாத்...

india 16
உலகம்செய்திகள்

சூரியப் புயல்களில் இருந்து பூமியைப் பாதுகாக்க விண்வெளியில் செயற்கை பிளாஸ்மா கவசம்: விஞ்ஞானிகள் புதிய திட்டம்

சூரியனில் இருந்து வெளியாகும் சக்திவாய்ந்த சூரியப் புயல்கள் (Solar Storms) மற்றும் புவிக்காந்தப் புயல்களினால் பூமியில்...

india 15
உலகம்செய்திகள்

போலி உரிமம் மூலம் 17 ஆண்டுகள் பயணிகள் விமானத்தை இயக்கிய ஏர் கனடா கேப்டன் கைது

ஏர் கனடா (Air Canada) விமான சேவை நிறுவனத்தில் போலி உரிம ஆவணங்களைப் பயன்படுத்தி, சுமார்...

india 13
அரசியல்இலங்கைசெய்திகள்

சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் குறித்து முறையான விசாரணை: நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஆனந்த விஜேபால உறுதி

கடந்த காலங்களில் நாட்டில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் மக்கள் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவங்கள் உள்ளிட்ட...