24 663d58b15246e
இலங்கைசெய்திகள்

ஈழத் தமிழருக்கு கிடைத்துள்ள சர்வதேச அங்கீகாரம்

Share

ஈழத் தமிழருக்கு கிடைத்துள்ள சர்வதேச அங்கீகாரம்

சர்வதேச ஒலிம்பிக் போட்டிகள் இவ்வருடம் ஜீலை மாதம் 26ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில் ஈழத் தமிழர் ஒருவருக்கு கிடைத்துள்ள வாய்ப்பானது பெரிதும் பாராட்டை பெற்றுள்ளது.

ஒலிம்பிக் தீப்பந்தத்தின் நீண்ட அஞ்சலோட்ட சுற்றுப்பயணம் கடந்த புதன்கிழமை கிரீஸில் இருந்து பிரான்ஸை(France) வந்தடைந்துள்ளது.

சர்வதேச ரீதியில் 10000 பேருக்கு ஒலிம்பிக் தீப்பந்தத்தினை ஏந்துவதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பரிஸ் நகரில் கடந்த வருடம் சிறந்த பாண் தயாரிப்பில் முதலிடம் பெற்ற யாழ்ப்பாணத்தை சேர்ந்த தர்ஷன் செல்வராஜாவுக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

பிரான்சின் பாரிசில் இடம்பெற்ற சிறந்த பாண் உற்பத்தியாளருக்கான போட்டியில் 2023ஆம் ஆண்டுக்கான விருதை வென்ற யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தர்ஷன் செல்வராஜா பெற்றிருந்தார்.

இந்நிலையில் பரிஸ் ஒலிம்பிக் சுடரை(Olympic torch) இம்முறை அவர் ஏந்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...