24 663d70fde865a
இலங்கைசெய்திகள்

கொழும்பில் இயங்கிய போலி வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் சுற்றிவளைப்பு

Share

கொழும்பில் இயங்கிய போலி வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் சுற்றிவளைப்பு

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் செல்லுபடியாகும் அனுமதிப்பத்திரம் இன்றி ராஜகிரிய பிரதேசத்தில் இயங்கிவந்த போலி வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனமொன்று சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.

விசேட புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளினால் நேற்று (5/8) இந்த சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

போலந்தில் தொழில் வழங்குவதாக பணம் பெற்றுக்கொண்ட இந்நிறுவனம் ராஜகிரிய பிரதேசத்தில் வீசா ஆலோசனை மையம் என்ற போர்வையில் இந்த நிறுவனம் இயங்கி வந்துள்ளமையும் தெரியவந்துள்ளது.

போலந்தில் தொழில் வழங்குவதற்காக நிறுவனத்திற்கு ஒரு இலட்சம் ரூபா பணம் வழங்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் உறுதியளித்தபடி தொழில் வழங்கப்படவில்லை எனவும் ஒருவர் பணியகத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

அதன்படி, சோதனை நடத்தப்பட்டு, நிறுவனத்தின் உரிமையாளரை விசாரணை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

மேலும், சம்பந்தப்பட்ட இடத்தில் கண்டெடுக்கப்பட்ட 2 வெளிநாட்டு கடவுச்சீட்டுகள் மற்றும் பல வெளிநாட்டு வேலைவாய்ப்பு விண்ணப்பங்களை விசாரணை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர் குருநாகல் பகுதியைச் சேர்ந்த 40 வயதுடையவர் எனவும், அவர் நேற்று (5/9) கொழும்பு, அளுத்கடை நீதவான் நீதிமன்ற இலக்கம் 5 இல் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
india 17
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பயணித்த அனைவரும் பலி

பாகிஸ்தான் ராணுவத்திற்குச் சொந்தமான ‘Mi-17’ ரக ஹெலிகாப்டர் ஒன்று, பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழுள்ள காஷ்மீரின் முசாபராபாத்...

india 16
உலகம்செய்திகள்

சூரியப் புயல்களில் இருந்து பூமியைப் பாதுகாக்க விண்வெளியில் செயற்கை பிளாஸ்மா கவசம்: விஞ்ஞானிகள் புதிய திட்டம்

சூரியனில் இருந்து வெளியாகும் சக்திவாய்ந்த சூரியப் புயல்கள் (Solar Storms) மற்றும் புவிக்காந்தப் புயல்களினால் பூமியில்...

india 15
உலகம்செய்திகள்

போலி உரிமம் மூலம் 17 ஆண்டுகள் பயணிகள் விமானத்தை இயக்கிய ஏர் கனடா கேப்டன் கைது

ஏர் கனடா (Air Canada) விமான சேவை நிறுவனத்தில் போலி உரிம ஆவணங்களைப் பயன்படுத்தி, சுமார்...

india 13
அரசியல்இலங்கைசெய்திகள்

சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் குறித்து முறையான விசாரணை: நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஆனந்த விஜேபால உறுதி

கடந்த காலங்களில் நாட்டில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் மக்கள் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவங்கள் உள்ளிட்ட...