24 664003f36b4b3
இலங்கைசெய்திகள்

சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவியொருவர் விபத்தில் படுகாயம்

Share

சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவியொருவர் விபத்தில் படுகாயம்

பலாங்கொடை – வெலிகேபொல வீதியில் இடம்பெற்ற விபத்தில் இவ்வருடம் சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவியொருவர் படுகாயமடைந்துள்ளார்.

பரீட்சை முடிந்து பேருந்தில் வீடு நோக்கிச் சென்று கொண்டிருந்த மாணவியொருவரே இவ்வாறு படுகாயமடைந்துள்ளார்.

பலாங்கொடை நோக்கிப் பயணித்த தனியார் பேருந்து ஒன்று எதிர்த் திசையில் பயணித்த இரும்புக் கம்பிகளை ஏற்றிச் சென்ற லொறியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தின் போது லொறியில் இருந்த சில இரும்புக் கம்பிகள் பேருந்திற்குள் வீசப்பட்ட நிலையில், பேருந்திற்குள் இருந்த மாணவி ஒருவரின் கழுத்து மற்றும் முகத்தில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து காயமடைந்த மாணவி பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக இரத்தினபுரி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், லொறியின் சாரதியின் கவனக்குறைவே இந்த விபத்துக்குக் காரணம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Share
தொடர்புடையது
பூசா சிறைச்சாலை
இலங்கை

மஹர சிறைச்சாலையில் இருந்து இடம்மாற்றப்பட்ட கைதிகள்.

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தினை அடுத்து, அங்கிருந்து 20 கைதிகள் பூசா சிறைச்சாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகச்...

prison
இலங்கை

கட்டுப்பாட்டிற்குள் வந்த பதற்ற நிலை – வெளியேறிய தீயணைப்பு வாகனங்கள்.

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றநிலை தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதுடன், அனைத்துக் கைதிகளையும் தற்போது அவர்களது சிறைக்...

Scammers
இலங்கை

அமைச்சரின் பெயரில் இடம்பெறும் பாரிய மோசடி.

கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி பிரதி அமைச்சர் சத்துரங்க அபேசிங்க பிரதி அமைச்சரை போல் ஆள்மாறாட்டம்...

Featured
இலங்கை

மஹர சிறையில் தற்போதைய நிலை .

ராகம பொலிஸ் எல்லைக்குட்பட்ட மஹர சிறைச்சாலையைச் சுற்றியுள்ள A, 246/கண்டலியத்த பாலுவ – மேற்கு, 246/C...