13 14
இலங்கைசெய்திகள்

அனுரகுமாரவின் கூட்டத்தில் சீருடைகளுடன் தாதியர் : விளக்கமளித்த தேர்தல் ஆணைக்குழு

Share

அனுரகுமாரவின் கூட்டத்தில் சீருடைகளுடன் தாதியர் : விளக்கமளித்த தேர்தல் ஆணைக்குழு

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவின் (Anura Kumara Dissanayake) தலைமையில் நடைபெற்ற தேசிய அகில இலங்கை தாதியர் மாநாட்டில், அரச தாதியர்கள் சீருடையில் கலந்து கொண்டமை குறித்து தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெளிவுபடுத்தியுள்ளது.

அது, தேர்தல் விதிமுறைகளை மீறுவதாக அமையாது என்று ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

முன்னதாக, பல்வேறு தரப்பினரால் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு, பதில் அளித்துள்ள, தேர்தல்கள் ஆணைக்குழு, பொது ஊழியர்களை நிர்வகிக்கும் ஸ்தாபன சட்டத்தின் கீழ் அத்தகைய பங்கேற்பு அனுமதிக்கப்படுகிறது என்று நியாயப்படுத்தியுள்ளார்.

ஸ்தாபனச் சட்டத்தின்படி, இது தேர்தல் விதிமீறல் ஆகாது என்று கூறிய தேர்தல் ஆணைக்குழுவின் அதிகாரி ஒருவர், எந்த அரசியல் கட்சியையும் ஆதரிக்கும் உரிமை அரச ஊழியர்களுக்கு உண்டு என்பதை எடுத்துக்காட்டினார்.

இந்தநிலையில், தேசிய அகில இலங்கை தாதியர் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சுகாதார அமைச்சின் செயலாளர், தாதியர்களுக்கு கடமை விடுப்பு வழங்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

எனினும், சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்களுக்கான பிரசாரம் என்ற கபே (CaFFE), மாநாட்டில் சீருடையில் அரசு தாதியர்கள் கலந்து கொள்வது நிறுவன விதிகள் மற்றும் தேர்தல் விதிமுறைகள் இரண்டையும் மீறுவதாகக் குற்றம் சாட்டி மறுப்புக் குரல் கொடுத்துள்ளது.

Share

Recent Posts

தொடர்புடையது
images 2 2
செய்திகள்உலகம்

சீனாவின் மிகவும் மேம்பட்ட விமானம் தாங்கிக் கப்பல் ‘ஃபுஜியன்’ சேவையில் இணைப்பு: கடற்படை மேலாதிக்கத்தில் அமெரிக்காவுக்குப் போட்டி!

சீனாவின் மிகவும் திறமையான மற்றும் மேம்பட்ட விமானம் தாங்கிக் கப்பலான ஃபுஜியன் (Fujian) இன்று (நவம்பர்...

24 6714e92d5188d
செய்திகள்அரசியல்இலங்கை

என்னை ஹிட்லர் என்கிறார்கள், பாவம்: குற்றங்களைக் கட்டுப்படுத்துவது குறித்து எழுந்த விமர்சனங்களுக்கு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க பதிலடி!

நாட்டில் இடம்பெற்று வரும் குற்றங்களைக் கட்டுப்படுத்துவற்கு நடவடிக்கை எடுக்கும் போது தன்னைச் சிலர் ‘ஹிட்லர்’ என...

images 1 2
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணத்தில் தீடீர் சோதனைகள்: கூரிய ஆயுதங்கள் மற்றும் ஹெரோயினுடன் 9 பேர் கைது!

யாழ்ப்பாணக் காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் கடந்த இரண்டு தினங்களாக நடத்தப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கைகளின் போது,...

MediaFile 8
இலங்கைசெய்திகள்

போதைப்பொருள் ஒழிப்புக்கு ரூ. 2000 மில்லியன் ஒதுக்கீடு! மஹாபொல மற்றும் ஆசிரியர் மாணவர் கொடுப்பனவு ரூ. 2500 அதிகரிப்பு – ஜனாதிபதி அறிவிப்பு!

போதைப்பொருள் ஒழிப்பு, உயர்கல்வி மற்றும் தொழிற் பயிற்சியை மேம்படுத்துதல் ஆகிய துறைகளுக்காகப் பல முக்கிய நிதி...