9 1
இலங்கைசெய்திகள்

அவுஸ்திரேலியாவில் குடியேறும் இலங்கையர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு

Share

இலங்கையில் இருந்து அவுஸ்திரேலியாவில் குடியேறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரியவருகிறது.

அவுஸ்திரேலிய புள்ளியியல் பணியகத்தின் தரவுகளின்படி இந்த விடயம் தெரியவந்துள்ளது.

2024 ஜூன் 30, நிலவரப்படி, அவுஸ்திரேலியாவின் மதிப்பிடப்பட்ட குடியிருப்பாளர் மக்கள் தொகை 27.2 மில்லியன்களாகும்.

இதில் அவுஸ்திரேலியாவில் பிறந்தவர்கள் 18.6 மில்லியன் பேர் மற்றும் வெளிநாடுகளில் பிறந்தவர்கள் 8.6 மில்லியன் பேர் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்தநிலையில் 2024 இன் கணக்கெடுப்பின்படி, இலங்கையில் பிறந்தவர்கள் 172 ஆயிரம் பேர் அவுஸ்திரேலியாவில் வசிப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

2024 வரையிலான 10 ஆண்டுகளில் அவுஸ்திரேலியாவின் வெளிநாட்டில் பிறந்த மக்கள் தொகையில் மிகப்பெரிய அதிகரிப்பு இந்தியா, சீனா, பிலிப்பைன்ஸ் மற்றும் நேபாளத்தில் பிறந்தவர்களால் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, அமெரிக்கா சர்வதேச புலம்பெயர்ந்தோரின் மிகப்பெரிய மக்கள்தொகையைக் கொண்டிருக்கிறது.

இதன்படி, அமெரிக்காவில், வசிப்போரில், அந்த நாட்டுக்கு வெளியே பிறந்தவர்கள் 52.4 மில்லியன் பேர் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

Share

Recent Posts

தொடர்புடையது
image 95099f5203
செய்திகள்இலங்கை

கொழும்பில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்திய வன்னி மாவட்ட எம்.பி. ரவிகரன்: வரவு செலவுத் திட்ட அமர்வுக்கு மத்தியில் உணர்வெழுச்சி!

தேச விடுதலைக்காகப் போராடி மடிந்த வீர மறவர்களை நினைவுகூரும் மாவீரர் வாரம் வெள்ளிக்கிழமை (நவம்பர் 21)...

images 1 11
செய்திகள்இலங்கை

அரகலய போராட்டத்தை ஜனநாயக ரீதியில் கட்டுப்படுத்தினோம்: சர்வதேச சக்திகளின் ஆதரவு இருந்தாலும் பணியவில்லை – முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க!

நாட்டில் இடம்பெற்ற அரகலய போராட்டத்தை ஜனநாயக ரீதியில் கட்டுப்படுத்தியதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்....

image e0f1498f29
செய்திகள்இலங்கை

தமிழ் தேசிய மாவீரர் வாரம் ஆரம்பம்: வேலணை சாட்டி துயிலும் இல்லத்தில் ஈகச் சுடரேற்றல் நிகழ்வு!

தேச விடுதலைக்காக போராடி மடிந்த வீர மறவர்களை நினைவுகூரும் தமிழ் தேசிய மாவீரர் வாரத்தின் ஆரம்ப...

Archchuna Ramanathan 1200px 24 11 22
செய்திகள்அரசியல்இலங்கை

பாராளுமன்ற உணவகத்தில் எம்.பி.க்கு கொலை மிரட்டல்: முஹம்மட் பைசல் மீது அர்ச்சுனா எம்.பி. குற்றச்சாட்டு!

தேசிய மக்கள் சக்தியின் (NPP) புத்தளம் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரால், இன்று (நவ 21)...