1731422873 parkiment
இலங்கைசெய்திகள்

அநுர கட்சியில் ஈஸ்டர் குண்டுதாரிகளுடன் தொடர்புடையவர்கள்…சஜித் தரப்பு பகிரங்கம்

Share

அநுர கட்சியில் ஈஸ்டர் குண்டுதாரிகளுடன் தொடர்புடையவர்கள்…சஜித் தரப்பு பகிரங்கம்

தேசிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியிலில் ஈஸ்டர் குண்டுதாரிகளுடன் தொடர்புடையவர்கள் இருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா (Harshana Rajakaruna) தெரிவித்துள்ளார்.

இன்றைய நாடாளுமன்ற அமர்வில் அமைச்சர் வசந்த சமரசிங்க (Wasantha Samarasinghe) தெரிவித்த கருத்துக்கு பதில் அளிக்கும் வகையில் நாடாளுமன்ற உறுப்பினர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடயம் தொடர்பல் மேலும் தெரியவருவதாவது, “அரிசி கையிருப்புகளை சந்தைக்கு வெளியிடத் தவறிய ஆலை உரிமையாளர் ஒருவர் ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார் என அமைச்சர் வசந்த சமரசிங்க நாடாளுமன்றில் தெரிவித்தார்.

அத்தோடு, ரத்ன அரிசி ஆலைக்கு சொந்தக்காரரான குறித்த நபர் இலங்கை வங்கியொன்றில் 3.5 பில்லியன் ரூபா கடனாக பெற்றுள்ளதாகவும் அமைச்சர் வசந்த குறிப்பிட்டார்.

அதனை தொடர்ந்து, அமைச்சர் வசந்தவின் கருத்துக்கு பதில் வழங்கிய நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா, தேசிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியலிலும் ஈஸ்டர் குண்டுதாரிகளுடன் தொடர்புடையவர்களே உள்ளனர் என தெரிவித்தார்.”

Share
தொடர்புடையது
44522559 ravann
செய்திகள்உலகம்

மதுரோ பாணி கைது புதினுக்குப் பொருந்தாது: உக்ரைன் ஜனாதிபதியின் எதிர்பார்ப்பும் ட்ரம்பின் நேரடிப் பதிலும்!

வெனிசுவேலா ஜனாதிபதி நிகோலஸ் மதுரோ அமெரிக்கப் படைகளால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அதே போன்றதொரு...

images 4 3
செய்திகள்அரசியல்இலங்கை

டக்ளஸ் தேவானந்தா ஒரு சர்வதேசக் குற்றவாளி; கைதை வெறும் கண்துடைப்பாக மாற்ற வேண்டாம் – சட்டத்தரணி சுகாஸ் கடும் சாடல்!

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வெறும் ஆயுத மோசடியாளர் மட்டுமல்ல, அவர் தமிழர்களுக்கு எதிரான பல...

black flag
செய்திகள்இலங்கை

பெப்ரவரி 04 தமிழர்களின் கரிநாள்: கிளிநொச்சி மற்றும் மட்டக்களப்பில் பாரிய பேரணிக்கு அழைப்பு!

இலங்கையின் சுதந்திர தினமான எதிர்வரும் பெப்ரவரி மாதம் 04 ஆம் திகதியை, தமிழர் தேசத்தின் “கரிநாளாக”...

External Affairs Minister S Jaishankar calls on Sri Lankan President Anura Kumara Dissanayake in Colombo on Tuesday. ANI
செய்திகள்இலங்கை

இலங்கை அரசியலில் இராஜதந்திரப் போர்: இந்தியாவின் $450 மில்லியன் நிதியுதவியும், சீனாவின் அடுத்தகட்ட நகர்வும்!

இலங்கைக்கு அண்மையில் விஜயம் மேற்கொண்ட இந்திய மற்றும் சீன உயர்மட்டத் தூதுவர்களின் சந்திப்புகள் குறித்து இதுவரை...