இலங்கைசெய்திகள்

விடுமுறையில் வெளிநாடு சென்ற அரச ஊழியர்களுக்கு வெளியான முக்கிய அறிவித்தல் !

19 9
Share

விடுமுறையில் வெளிநாடு சென்ற அரச ஊழியர்களுக்கு வெளியான முக்கிய அறிவித்தல் !

விடுமுறையில் வெளிநாடுகளுக்கு சென்ற அரச ஊழியர்கள், விடுமுறை நிறைவடைந்த பின்னர் உரிய தினத்தில் கடமைக்கு சமுகமளிக்காவிட்டால் சேவையிலிருந்து விலகிச் சென்றதாக கருதப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயமானது பொதுநிர்வாக அமைச்சின் செயலாளரின் கையொப்பத்துடன் வெளியான சுற்று நிருபத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், வெளிநாட்டு விடுமுறை காலத்தை நீடிக்க வேண்டுமாயின் முதலாவது விடுமுறை காலம் நிறைவடைவதற்கு முன்னர் அதற்கான அனுமதியை பெற்றுக்கொள்ள வேண்டுமென அரச நிறுவன பிரதானிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்று நிருபத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுமுறை காலத்தை நீடித்துக்கொள்ளும் அனுமதியை பெறுவதில் ஏற்படும் சிக்கல் ஏற்கனவே பெறப்பட்ட விடுமுறை காலப்பகுதிக்குள் தீர்க்கப்படாவிட்டால் உரிய தினத்தில் கடமைக்கு சமுகமளிக்க வேண்டியது கட்டாயமெனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும், அரச ஊழியர்களின் வெளிநாட்டு விடுமுறை தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள சுற்று நிருபத்தை மீறும் நிறுவனங்களின் பிரதானிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென பொதுநிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
Related Articles
25 3
இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பது தொடர்பில் பேச்சுவார்த்தை

உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பது தொடர்பில் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்மைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம் என...

22 5
இலங்கைசெய்திகள்

யாழில் ஆலயத்திற்கு அழைத்து வரப்பட்ட யானை மிரண்டதால் இருவர் காயம்

யாழ்ப்பாணத்தில் உள்ள ஆலயம் ஒன்றிற்கு தென்னிலங்கையில் இருந்து அழைத்து வரப்பட்ட யானை மிரண்டதால் இருவர் காயமடைந்த...

21 6
இலங்கைசெய்திகள்

வடக்கு – கிழக்கில் காணிகளை அபகரிக்கும் வர்த்தமானியின் உள்நோக்கம் என்ன.. சிறீதரன் தெரிவிப்பு

வடக்கு – கிழக்கு மாகாணங்களில் உள்ள 5,700 ஏக்கருக்கும் அதிகமான தமிழர்களின் பூர்வீக நிலங்களைச் சுவீகரிப்பதற்காக...

24 4
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபையை கைப்பற்ற பேரம் பேசும் அரசாங்கம்! நாடாளுமன்றில் பகிரங்க குற்றச்சாட்டு

கொழும்பு மாநகர சபையின் அதிகாரத்தை பெற்றுக்கொள்ள பல உறுப்பினர்களுடன் அரசு மில்லியன் கணக்கான ரூபா பேரம்...