18 10
இலங்கைசெய்திகள்

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சத்திர சிகிச்சைக்காக காத்துக் கிடக்கும் 5000 இதயநோயாளிகள்

Share

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சத்திர சிகிச்சைக்காக காத்துக் கிடக்கும் 5000 இதயநோயாளிகள்

கொழும்பு(colombo) தேசிய வைத்தியசாலையில் ஐயாயிரம் இதய நோயாளிகள் சத்திரசிகிச்சைக்காக காத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

இதன்படி நானூறு (400) நோயாளிகள் ஒரு வருடம் மற்றும் பதினொரு மாதங்களுக்குள் இதய அறுவை சிகிச்சைக்காக காத்திருக்கும் பட்டியலில் உள்ளனர். மேலும், இரண்டு முதல் மூன்று வருட காலத்திற்கு எழுநூற்று ஐம்பத்தாறு (756) நோயாளிகளும், மூன்று வருட காலத்திற்கு அறுநூறு (600) நோயாளிகளும், இரண்டாயிரத்து நானூறு (2400) நோயாளிகள் நான்கு வருட காலம் காத்திருப்போர் பட்டியலில் உள்ளனர்.

இந்த நோயாளர்கள் முறையான முறையில் சத்திரசிகிச்சையை மேற்கொள்ளும் போது சில நோயாளிகள் உயிரிழப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என மருத்துவ மற்றும் சிவில் உரிமைகள் தொடர்பான வைத்தியர்கள் ஒன்றியத்தின் தலைவர் வைத்திய நிபுணர் சமல் சஞ்சீவ நேற்று (08) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

அரசாங்கத்தினால் தெரிவு செய்யப்பட்ட விசேட சத்திரசிகிச்சை காத்திருப்புப் பட்டியலில் உள்ள நோயாளிகளுக்கு அரசாங்கத்தின் ஆதரவில் தனியார் துறையினரால் சத்திரசிகிச்சையை மேற்கொள்ளுமாறு அடிக்கடி நிர்ப்பந்திக்கப்படும் நோயாளிகளுக்கு திறைசேரி உதவி வழங்கப்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டார்.

இல்லையேல் விசேட நோய்களுக்கு செல்லுபடியாகும் வகையில் மருத்துவ காப்புறுதி முறையை மக்களுக்கு அறிமுகப்படுத்துவது அவசியமாகலாம் என நிபுணர் டொக்டர் சமல் சஞ்சீவ மேலும் தெரிவித்துள்ளார்.

 

Share
தொடர்புடையது
uni
இலங்கை

யாழ். பல்கலைக்கழகத்தில் வெடித்த போராட்டம்.

பேராசிரியர் உள்ளிட்ட இருவருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள பாலியல் துஸ்பிரயோகம் தொடர்பிலான குற்றச்சாட்டு தொடர்பில் ,யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில்...

gold 2
வணிகம்இலங்கைஉலகம்

இன்றைய தினத்திலும் தங்கத்தின் விலையில் சரிவு!

தங்கம் மற்றும் வெள்ளியின் விலையானது இன்றும் குறிப்பிடத்தக்க வீழ்ச்சியினை பதிவு செய்துள்ளது. சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள...

1500x900 175299 dead body
இலங்கை

நீர்கொழும்பு சிறையில் மீண்டும் வெடித்த மோதல் – இந்திய பிரஜை ஒருவர் மரணம்.

நீர்கொழும்பு சிறைச்சாலையில் கடந்த 05 மற்றும் 06 ஆம் திகதிகளில் ஏற்பட்ட மோதல்களுக்குப் பின்னர் அங்கு...

veppam
இலங்கை

கிழக்கினை தாக்கவுள்ள வெப்ப அலை – பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.

நாளைய தினம் மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் மொனராகலை மாவட்டங்களின் சில பகுதிகளில் மனித உடலால் உணரப்படும்...