18 10
இலங்கைசெய்திகள்

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சத்திர சிகிச்சைக்காக காத்துக் கிடக்கும் 5000 இதயநோயாளிகள்

Share

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சத்திர சிகிச்சைக்காக காத்துக் கிடக்கும் 5000 இதயநோயாளிகள்

கொழும்பு(colombo) தேசிய வைத்தியசாலையில் ஐயாயிரம் இதய நோயாளிகள் சத்திரசிகிச்சைக்காக காத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

இதன்படி நானூறு (400) நோயாளிகள் ஒரு வருடம் மற்றும் பதினொரு மாதங்களுக்குள் இதய அறுவை சிகிச்சைக்காக காத்திருக்கும் பட்டியலில் உள்ளனர். மேலும், இரண்டு முதல் மூன்று வருட காலத்திற்கு எழுநூற்று ஐம்பத்தாறு (756) நோயாளிகளும், மூன்று வருட காலத்திற்கு அறுநூறு (600) நோயாளிகளும், இரண்டாயிரத்து நானூறு (2400) நோயாளிகள் நான்கு வருட காலம் காத்திருப்போர் பட்டியலில் உள்ளனர்.

இந்த நோயாளர்கள் முறையான முறையில் சத்திரசிகிச்சையை மேற்கொள்ளும் போது சில நோயாளிகள் உயிரிழப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என மருத்துவ மற்றும் சிவில் உரிமைகள் தொடர்பான வைத்தியர்கள் ஒன்றியத்தின் தலைவர் வைத்திய நிபுணர் சமல் சஞ்சீவ நேற்று (08) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

அரசாங்கத்தினால் தெரிவு செய்யப்பட்ட விசேட சத்திரசிகிச்சை காத்திருப்புப் பட்டியலில் உள்ள நோயாளிகளுக்கு அரசாங்கத்தின் ஆதரவில் தனியார் துறையினரால் சத்திரசிகிச்சையை மேற்கொள்ளுமாறு அடிக்கடி நிர்ப்பந்திக்கப்படும் நோயாளிகளுக்கு திறைசேரி உதவி வழங்கப்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டார்.

இல்லையேல் விசேட நோய்களுக்கு செல்லுபடியாகும் வகையில் மருத்துவ காப்புறுதி முறையை மக்களுக்கு அறிமுகப்படுத்துவது அவசியமாகலாம் என நிபுணர் டொக்டர் சமல் சஞ்சீவ மேலும் தெரிவித்துள்ளார்.

 

Share
தொடர்புடையது
veppam
இலங்கை

கிழக்கினை தாக்கவுள்ள வெப்ப அலை – பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.

நாளைய தினம் மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் மொனராகலை மாவட்டங்களின் சில பகுதிகளில் மனித உடலால் உணரப்படும்...

mini 1
இலங்கை

முன்னாள் அமைச்சர் ஜகத் புஷ்பகுமாரவுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு.

இன்றைய தினம் காலை (08.07. 2026) ஊழல் குற்றச்சாட்டுகளின் பேரில் இலஞ்ச ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட...

nilam
இலங்கைபிராந்தியம்

யாழ். வடமராட்சியில் பறிபோக இருக்கும் நிலம் – தொடரும் அத்துமீறல்கள்

யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதியில் உள்ள காணியொன்று இராணுவத்தினரால் சுவீகரிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த நடவடிக்கை நாளை...

palaali
இலங்கை

யாழ்.பலாலி இராஜேஸ்வரி ஆலயத்தில் தடையற்ற வழிபாடுகள் – நிபந்தனைகளுடன் பாதையினை விடுவிக்க இணங்கிய ராணுவம்

பலாலி இராஜேஸ்வரி அம்மன் ஆலயம் 35 வருடங்களுக்குப் பின்னர் கடந்த வருடம் விடுவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில்...