18 10
இலங்கைசெய்திகள்

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சத்திர சிகிச்சைக்காக காத்துக் கிடக்கும் 5000 இதயநோயாளிகள்

Share

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சத்திர சிகிச்சைக்காக காத்துக் கிடக்கும் 5000 இதயநோயாளிகள்

கொழும்பு(colombo) தேசிய வைத்தியசாலையில் ஐயாயிரம் இதய நோயாளிகள் சத்திரசிகிச்சைக்காக காத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

இதன்படி நானூறு (400) நோயாளிகள் ஒரு வருடம் மற்றும் பதினொரு மாதங்களுக்குள் இதய அறுவை சிகிச்சைக்காக காத்திருக்கும் பட்டியலில் உள்ளனர். மேலும், இரண்டு முதல் மூன்று வருட காலத்திற்கு எழுநூற்று ஐம்பத்தாறு (756) நோயாளிகளும், மூன்று வருட காலத்திற்கு அறுநூறு (600) நோயாளிகளும், இரண்டாயிரத்து நானூறு (2400) நோயாளிகள் நான்கு வருட காலம் காத்திருப்போர் பட்டியலில் உள்ளனர்.

இந்த நோயாளர்கள் முறையான முறையில் சத்திரசிகிச்சையை மேற்கொள்ளும் போது சில நோயாளிகள் உயிரிழப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என மருத்துவ மற்றும் சிவில் உரிமைகள் தொடர்பான வைத்தியர்கள் ஒன்றியத்தின் தலைவர் வைத்திய நிபுணர் சமல் சஞ்சீவ நேற்று (08) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

அரசாங்கத்தினால் தெரிவு செய்யப்பட்ட விசேட சத்திரசிகிச்சை காத்திருப்புப் பட்டியலில் உள்ள நோயாளிகளுக்கு அரசாங்கத்தின் ஆதரவில் தனியார் துறையினரால் சத்திரசிகிச்சையை மேற்கொள்ளுமாறு அடிக்கடி நிர்ப்பந்திக்கப்படும் நோயாளிகளுக்கு திறைசேரி உதவி வழங்கப்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டார்.

இல்லையேல் விசேட நோய்களுக்கு செல்லுபடியாகும் வகையில் மருத்துவ காப்புறுதி முறையை மக்களுக்கு அறிமுகப்படுத்துவது அவசியமாகலாம் என நிபுணர் டொக்டர் சமல் சஞ்சீவ மேலும் தெரிவித்துள்ளார்.

 

Share
தொடர்புடையது
sri lankan buddhist monks participate all night 440nw 10583135b
செய்திகள்இலங்கை

தேரர்களை இழிவுபடுத்த வேண்டாம்: சைபர் தாக்குதல்களுக்கு எதிராக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு!

மிஹிந்தலை ரஜமஹா விகாராதிபதி உள்ளிட்ட மகா சங்கத்தினரை இழிவுபடுத்தும் நோக்கில் சமூக வலைதளங்கள் வாயிலாக முன்னெடுக்கப்படும்...

26 69648efcbd42c
செய்திகள்அரசியல்இலங்கை

பாதுகாப்புத் தரப்பிடம் மண்டியிட்டதா அநுர அரசாங்கம்?: புதிய பயங்கரவாத சட்ட வரைவுக்கு சுமந்திரன் கடும் எதிர்ப்பு!

தற்போதைய அரசாங்கம் கொண்டுவரவுள்ள ‘பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம்’ (PSTA) எனும் புதிய சட்ட வரைவானது,...

download 1
செய்திகள்இலங்கை

பத்தரமுல்லையில் கார்களை வாளால் தாக்கிய இளைஞர்: ஜனவரி 22 வரை விளக்கமறியல்!

பத்தரமுல்ல – தியத உயன மற்றும் எத்துல் கோட்டை பிரதான வீதியில் மோட்டார் சைக்கிளில் சென்றவாறு,...

images 9 2
செய்திகள்அரசியல்இலங்கை

விடைபெறும் அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் – முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் சந்திப்பு!

இலங்கைக்கான தனது இராஜதந்திரப் பணிகளை நிறைவு செய்து கொண்டு நாடு திரும்பவுள்ள அமெரிக்கத் தூதுவர் ஜூலி...