24 6607a035c8dc1
இலங்கைசெய்திகள்

வடக்கு மற்றும் தெற்கு மக்களை ஏமாற்றிய வரலாறு கொண்ட ரணில்

Share

வடக்கு மற்றும் தெற்கு மக்களை ஏமாற்றிய வரலாறு கொண்ட ரணில்

தென்பகுதி மக்களையும், வடபகுதி மக்களையும் ஏமாற்றிய வரலாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு உண்டு என நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி (Chandima Weerakkody) குற்றம் சுமத்தியுள்ளார்.

எனினும் வடக்கு மக்களை இனியும் ரணில் விக்ரமசிங்கவால் ஏமாற்ற முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

காலியில் வைத்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், தாமே ஜனாதிபதி வேட்பாளர் என வலுக்கட்டாயமாக ஜனாதிபதி ஆசனத்தில் அமர்ந்த ரணில் விக்ரமசிங்க இன்று கூறுகின்றார்.

ஆனால் பொதுஜன பெரமுன ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதி வேட்பாளராக இதுவரை தெரிவு செய்யவில்லை. தென்பகுதி மக்களையம் வடபகுதி மக்களையும் ஏமாற்றிய வரலாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு உண்டு.

எனவே வடக்கு மக்களை இனியும் அவரால் ஏமாற்ற முடியாது. ஐக்கிய தேசியக் கட்சியினால் வெறும் ஒன்றரை லட்சம் வாக்குகளை மாத்திரமே பெற முடியும்.

எனவே இவை அனைத்தும் ஏமாற்று செயற்பாடாகும். மக்களின் நிராகரிப்புக்குள்ளான இவர்களின் அரசியல் பயணத்திற்கு மக்கள் முற்றுப்புள்ளி வைத்துள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
l90920260121101853
செய்திகள்உலகம்

ஜனாதிபதி ட்ரம்பின் ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு: வாஷிங்டனுக்கு அவசரமாகத் திரும்பியது!

சுவிட்சர்லாந்து நோக்கிப் பயணித்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் ‘ஏர் ஃபோர்ஸ் ஒன்’ (Air Force...

25095672 tn8
செய்திகள்உலகம்

காசா அமைதி வாரியத்தில் இணையுமாறு புடினுக்கு ட்ரம்ப் அழைப்பு: சர்வதேச அரசியலில் அதிரடித் திருப்பம்!

காசாவின் மறுசீரமைப்பு மற்றும் நிர்வாகத்தைக் கவனிக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உருவாக்கியுள்ள அமைதி வாரியத்தில்...

images 6 5
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சமூக சீரழிவின் மையமாக மாறும் மண்டைதீவு சுற்றுலாத்தளம்: வேலணை பிரதேச சபையில் உறுப்பினர் அனுசியா கடும் எச்சரிக்கை!

உருவாக்கப்பட்ட நோக்கத்திற்கு மாறாக சமூக சீரழிவின் மையமாக உருவெடுத்துவரும் மண்டைதீவு சுற்றுலாத்தளத்தை சமூக விரோத செயற்பாடுகளின்...

images 7 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

டிட்வா சூறாவளி அனர்த்தம்: 525 பேருக்கு மரணச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் அறிவிப்பு!

டிட்வா (Ditwa) சூறாவளி அனர்த்தத்தினால் உயிரிழந்தவர்களில் இதுவரை அடையாளம் காணப்பட்ட 525 நபர்களுக்கான மரணச் சான்றிதழ்கள்...