24 6607a035c8dc1
இலங்கைசெய்திகள்

வடக்கு மற்றும் தெற்கு மக்களை ஏமாற்றிய வரலாறு கொண்ட ரணில்

Share

வடக்கு மற்றும் தெற்கு மக்களை ஏமாற்றிய வரலாறு கொண்ட ரணில்

தென்பகுதி மக்களையும், வடபகுதி மக்களையும் ஏமாற்றிய வரலாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு உண்டு என நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி (Chandima Weerakkody) குற்றம் சுமத்தியுள்ளார்.

எனினும் வடக்கு மக்களை இனியும் ரணில் விக்ரமசிங்கவால் ஏமாற்ற முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

காலியில் வைத்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், தாமே ஜனாதிபதி வேட்பாளர் என வலுக்கட்டாயமாக ஜனாதிபதி ஆசனத்தில் அமர்ந்த ரணில் விக்ரமசிங்க இன்று கூறுகின்றார்.

ஆனால் பொதுஜன பெரமுன ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதி வேட்பாளராக இதுவரை தெரிவு செய்யவில்லை. தென்பகுதி மக்களையம் வடபகுதி மக்களையும் ஏமாற்றிய வரலாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு உண்டு.

எனவே வடக்கு மக்களை இனியும் அவரால் ஏமாற்ற முடியாது. ஐக்கிய தேசியக் கட்சியினால் வெறும் ஒன்றரை லட்சம் வாக்குகளை மாத்திரமே பெற முடியும்.

எனவே இவை அனைத்தும் ஏமாற்று செயற்பாடாகும். மக்களின் நிராகரிப்புக்குள்ளான இவர்களின் அரசியல் பயணத்திற்கு மக்கள் முற்றுப்புள்ளி வைத்துள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
MediaFile 3 6
செய்திகள்அரசியல்இலங்கை

தையிட்டி ஆர்ப்பாட்டம்: கைது செய்யப்பட்ட வேலன் சுவாமி உள்ளிட்ட ஐவரும் பிணையில் விடுதலை!

யாழ்ப்பாணம், வலிகாமம் வடக்கு – தையிட்டி பகுதியில் இன்று முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட...

25 68123cd9dd1b1
செய்திகள்இலங்கை

எரிபொருள் இருப்பு உறுதி; ஜனவரி விலை திருத்தம் குறித்து இன்னும் முடிவில்லை – கனியவளக் கூட்டுத்தாபனம்!

தேசிய எரிபொருள் தேவையை எவ்விதத் தடையுமின்றி நிறைவு செய்யத் தேவையான போதியளவு இருப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக...

google logo
செய்திகள்உலகம்

ஊழியர்களை சர்வதேசப் பயணங்களைத் தவிர்க்குமாறு கூகுள் எச்சரிக்கை!

அமெரிக்க விசா வைத்திருக்கும் தனது ஊழியர்கள் சர்வதேசப் பயணங்களைத் தவிர்க்க வேண்டும் என கூகுள் நிறுவனம்...

image 42fd4006b9
செய்திகள்அரசியல்இலங்கை

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளை மீளமைக்க யுனிசெப் ஆதரவு: பிரதமர் ஹரிணி அமரசூரியவுடன் முக்கிய சந்திப்பு!

அண்மைக்கால அனர்த்தங்களினால் சேதமடைந்த பாடசாலைக் கட்டமைப்புகளைச் சீரமைப்பது மற்றும் மாணவர்களின் கல்வியைத் தொடர்வது குறித்து பிரதமர்...