24 6607a035c8dc1
இலங்கைசெய்திகள்

வடக்கு மற்றும் தெற்கு மக்களை ஏமாற்றிய வரலாறு கொண்ட ரணில்

Share

வடக்கு மற்றும் தெற்கு மக்களை ஏமாற்றிய வரலாறு கொண்ட ரணில்

தென்பகுதி மக்களையும், வடபகுதி மக்களையும் ஏமாற்றிய வரலாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு உண்டு என நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி (Chandima Weerakkody) குற்றம் சுமத்தியுள்ளார்.

எனினும் வடக்கு மக்களை இனியும் ரணில் விக்ரமசிங்கவால் ஏமாற்ற முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

காலியில் வைத்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், தாமே ஜனாதிபதி வேட்பாளர் என வலுக்கட்டாயமாக ஜனாதிபதி ஆசனத்தில் அமர்ந்த ரணில் விக்ரமசிங்க இன்று கூறுகின்றார்.

ஆனால் பொதுஜன பெரமுன ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதி வேட்பாளராக இதுவரை தெரிவு செய்யவில்லை. தென்பகுதி மக்களையம் வடபகுதி மக்களையும் ஏமாற்றிய வரலாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு உண்டு.

எனவே வடக்கு மக்களை இனியும் அவரால் ஏமாற்ற முடியாது. ஐக்கிய தேசியக் கட்சியினால் வெறும் ஒன்றரை லட்சம் வாக்குகளை மாத்திரமே பெற முடியும்.

எனவே இவை அனைத்தும் ஏமாற்று செயற்பாடாகும். மக்களின் நிராகரிப்புக்குள்ளான இவர்களின் அரசியல் பயணத்திற்கு மக்கள் முற்றுப்புள்ளி வைத்துள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
25 692fae9358269 1
செய்திகள்இலங்கை

அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்குப் பற்றாக்குறை இல்லை: அமைச்சர் வசந்த சமரசிங்க உறுதி!

நாட்டில் அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்குப் பற்றாக்குறை இல்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது. பேரிடர் சூழ்நிலை காரணமாக...

image aef113ab57 1
செய்திகள்இலங்கை

ஹட்டன் – கொழும்பு வீதி மீண்டும் திறப்பு: பஸ் சேவைகள் ஆரம்பம்!

நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக மண்சரிவு மற்றும் மண்மேடுகள் சரிந்து விழுந்ததால் பாதிக்கப்பட்டிருந்த ஹட்டன்...

1740048123351
செய்திகள்இலங்கை

அனர்த்தத்தின் பெயரால் நிதி மோசடி: நுவரெலியாவில் பணம் வசூலிக்கும் மோசடிக்காரர்கள் குறித்து அவதானம் தேவை!

நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் மண்சரிவு உட்பட இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, சில நபர்கள்...

000 86jq4zl
செய்திகள்இலங்கை

இலங்கையில் புதிய சூறாவளி வதந்தி பொய்: டிச. 4-5இல் லேசான மழைக்கே வாய்ப்பு – வளிமண்டலவியல் திணைக்களம்!

இலங்கையில் வரும் நாட்களில் புதிய சூறாவளி ஏற்பட வாய்ப்புள்ளதாகப் பரவி வரும் வதந்திகள் தவறானவை என்று...