10 3
இலங்கைசெய்திகள்

வெளிநாட்டிலிருந்து பணம் அனுப்புவது தொடர்பில் அரசாங்கம் வெளியிட்டுள்ள தகவல்

Share

வெளிநாடுகளில் இருந்து  இலங்கைத் தொழிலாளர்களால் அனுப்பப்படும் பணத்திற்கு வரி அறவிடப்பட மாட்டாது என அமைச்சர் அனில் ஜெயந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற வரவு செலவுத் திட்டம் மீதான குழுநிலை விவாதத்தின் போது அமைச்சர் கருத்து தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டுத் தொழிலாளர்களால் அனுப்பப்படும் பணத்திற்கு 15 வீதம் வரி அறிவிடப்படும் என போலியான தகவல்கள் வெளியிடப்படுவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

வரவு செலவுத்திட்டம் நிறைவேற்றப்படும் நிலையில், அரசாங்கத்திற்கு நெருக்கடியை ஏற்படுத்தும் வகையில் இவ்வாறான தகவல்கள் போலியாக பரப்பப்படுவதாக அமைச்சர் தெரிவித்தார்.

இது தொடர்பில் போலியான தகவலை வெளியிட்ட தென்னிலங்கை பத்திரிகை ஒன்றுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப் போவதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, டிஜிட்டல் மற்றும் சமூக வலைத்தளங்கள் ஊடாக வருமானம் ஈட்டுவோருக்கு எதிராக வரி விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அவர்களுக்கும் சலுகை அடிப்படையிலேயே வரி விதிக்கப்படவுள்ளது. 150000 ரூபாவுக்கும் குறைவான வருமானத்தை பெறும் டிஜிட்டல் செயற்பாட்டர்களுக்கு வரி விதிக்கு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
02 15
செய்திகள்உலகம்

எரிபொருள் விநியோகத்தை உறுதிப்படுத்த மேலதிக கப்பல்கள் வருகை: பெற்றோலியக் கூட்டுத்தாபனம்

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் சர்வதேச எரிபொருள் விநியோகச் சங்கிலியில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளைக் கருத்திற்கொண்டு,...

01 15
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் இன்று சில பகுதிகளில் மழை மற்றும் பனிமூட்டமான வானிலை!

வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள இன்றைய வானிலை அறிக்கையின்படி, நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் 2 மணிக்குப்...

29 6
செய்திகள்உலகம்

போர்நிறுத்தத்திற்கோ அல்லது பேச்சுவார்த்தைக்கோ ஈரான் ஒருபோதும் கோரிக்கை விடுக்கவில்லை: அப்பாஸ் அரக்சி

ஈரான் மற்றும் அமெரிக்கா – இஸ்ரேல் இடையிலான தற்போதைய போர்ச் சூழலில், ஈரான் எந்தவொரு போர்நிறுத்தத்தையோ...

28 6
செய்திகள்இந்தியா

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026: தேர்தல் ஆணையம் அட்டவணையை வெளியிட்டது

தமிழகத்தில் ஆளும் கட்சியான தி.மு.க. அரசின் பதவிக்காலம் எதிர்வரும் மே மாதம் 10-ஆம் திகதியுடன் நிறைவடைகிறது....