அந்நிய செலாவணிக்கு தட்டுப்பாடு இல்லை!

Nandalal Weerasinghe

நாட்டில் அத்தியாவசிய பொருட்களுக்கான அந்நிய செலாவணிக்கு தற்போது தட்டுப்பாடு இல்லையென   இலங்கை மத்திய வங்கியின்  ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

தற்போதைய நிலைமையில், அத்தியாவசியப் பொருட்களுக்கு அந்நியச் செலாவனி தட்டுப்பாடு இல்லை.  எண்ணெய், எரிவாயு, நிலக்கரி, அத்தியாவசிய மருந்துகள் என அனைத்துப் பொருட்களுக்கும் தேவையான அந்நிய செலாவணியை தற்போது மத்திய வங்கி வழங்குவதில்லை என்றார்.

வங்கி முறை மூலமாகவே தற்போது வழங்கப்படுகின்றது மற்றும் அதன் வைப்புத் தொகை இப்போது சுமார் 600 மில்லியனாக அதிகரித்துள்ளது.  தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே செல்லும் என்றும் அவர், நேர்காணலின் போது அறிவித்துள்ளார்.

#SriLankaNews

Exit mobile version