நாளை மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய தினங்களில் மின்வெட்டு அமுல்படுத்தப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் வௌ்ளி மற்றும் சனிக்கிழமைகளில் ஒரு மணிநேரம் மின்வெட்டை அமுல்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்னநாயக்க தெரிவித்தார்.
குறித்த நாட்களில் மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரையான காலப்பகுதிக்குள் ஒரு மணிநேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
#SriLankaNews
Leave a comment