Mahindanatha aluthkamake
அரசியல்இலங்கைசெய்திகள்

கோட்டா போன்ற ஒருவரை வரலாற்றில் காண முடியாது!

Share

” கோட்டாபய ராஜபக்ச போன்ற ஒரு அரச தலைவரை வரலாற்றில் இனி கண்டுபிடிக்க முடியாமல்போகும். கோட்டாபய ராஜபக்சவை பதவி விலக வலியுறுத்தியவர்கள் அது தொடர்பில் கவலையடையும் காலம் வரும்.”

இவ்வாறு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” அரசாங்க நிதியில் இருந்து ஒரு சதம்கூட களவாடாத தலைவர்தான் கோட்டாபய ராஜபக்ச. அவரது ஆட்சி காலத்தில் பாதாள குழு வெளியில் தலைகாட்டவில்லை. போராட்டக்களை ஒடுக்க கண்ணீர் புகை, தடியடி தாக்குதல் நடத்தவில்லை. ஜனாதிபதிக்கான செலவீனங்களை குறைப்பதற்கு நடவடிக்கை எடுத்தார்.

இப்படியானதொரு அரச தலைவரை இனி கண்டுபிடிப்பது கடினம். கோட்டாபய ராஜபக்சவை பதவி விலக வலியுறுத்தியவர்கள், அந்த முடிவு தொடர்பில் மரணிக்கும் தருவாயிலாவது கவலை அடைவார்கள்.

கோட்டாபய ராஜபக்ச அரசியலில் இருந்து ஒதுங்கிவிட்டார். இனி அரசியலுக்குள் வரும் எண்ணம் அவருக்கு இல்லை.” – என்றார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
03 19
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் தங்கத்தின் விலை சடுதியாக வீழ்ச்சி: இன்று ஒரே நாளில் ரூ. 13,000 குறைவு!

உலக சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்ததை அடுத்து, இலங்கையிலும் தங்கத்தின் விலை கணிசமாகக் குறைந்துள்ளதாக சந்தைத்...

25 10
இந்தியாசெய்திகள்

டெல்லி தீ விபத்து: மூன்று குழந்தைகள் உட்பட ஒன்பது பேர் பலி; பிரதமர் மோடி இரங்கல்!

இந்தியத் தலைநகர் டெல்லியின் பாலம் (Palam) பகுதியில் உள்ள நான்கு மாடிக் கட்டடம் ஒன்றில் இன்று...

20 17
செய்திகள்அரசியல்இலங்கை

நாமலுக்கு எதிரான மின்சாரக் கட்டண நிலுவை வழக்கு: ஜூலை 1-ம் திகதி உயர் நீதிமன்றத்தில் விசாரணை!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் திருமண நிகழ்விற்காகப் பயன்படுத்தப்பட்ட மின்சாரத்திற்கான 20 இலட்சம் ரூபாவிற்கும் (2...

19 15
செய்திகள்உலகம்

அலி லாரிஜானி படுகொலைக்கு ஈரான் பதிலடி: டெல் அவிவ் மீது கிளஸ்டர் ரக குண்டுகளால் தாக்குதல்!

ஈரானின் மூத்த பாதுகாப்புத் தலைவரான அலி லாரிஜானி, இஸ்ரேலியத் தாக்குதலில் கொல்லப்பட்டதற்குப் பதிலடியாக, இஸ்ரேலின் டெல்...