வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் உள்ளாடைகள் இல்லை என எவரும் உயிரிழந்து விடப் போவதில்லை என இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
நாட்டில் இறக்குமதி செய்யப்படும் பொருள்களை வரையறுத்துள்ளமையானது நாட்டின் உள்ளூர் உற்பத்தியை அதிகரிக்கச் செய்து நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பவே.
ஆனால் அதில் உள்ளாடைகளை வைத்து சிலர் அரசியல் செய்கிறார்கள். இது வெட்கப்பட வேண்டிய விடயமாகும்.
நாளுக்கு நாள் கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்டு மக்கள் இறக்கின்றனர். அதைவிடுத்து உள்ளாடைகளை அரசியலாக்கி கேலிக்குள்ளாக்குகின்றனர்.
இதேவேளை இதுவரை காலமும் உள்ளாடை இறக்குமதி செய்தமை குறித்து நாம் அனைவரும் வெட்கித் தலை குனிய வேண்டும்.
அதனை விட உள்ளாடைகளை அணியாமல் இருப்பது மேலானது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.