image 51f920dc30
இலங்கைசெய்திகள்

இனி பணிப்பெண்கள் கிடையாது!!

Share

இலங்கையைச் சேர்ந்த பெண் தொழிலாளர்களை வீட்டுப் பணிப்பெண்களாக அனுப்புவது அடுத்த வருடம் மார்ச் மாதம் முதல் நிறுத்தப்படும் என்று தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார, திங்கட்கிழமை (19) தெரிவித்தார்.

சர்வதேச தரத்துக்கு அமைய இலங்கையர்களை உள்நாட்டு உதவியாளர்களாக வெளிநாடுகளுக்கு அனுப்பும் வேலைத்திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.

வெளிநாட்டில் வாழும் இலங்கையர்களுக்கு வாகன இறக்குமதி அனுமதிப்பத்திரம், ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட பல திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும் என்றும் குறிப்பிட்டார்.

வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக சட்டரீதியில் இலங்கையர்கள் செல்வதை உறுதிப்படுத்தவும், அவர்களின் வருமானத்தை சட்டரீதியாக நாட்டுக்கு அனுப்பவும் நடவடிக்கை எடுக்கப்படும் – என்றார்.

நாட்டின் வரலாற்றில் முதல் தடவையாக, 2022 ஆம் ஆண்டில் 3 இலட்சத்துக்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்த பணியார்களை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் பதிவுசெய்து வசதிகளை வழங்கியதாகவும் சுட்டிக்காட்டினார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
image 1200x800 17
செய்திகள்அரசியல்இலங்கை

இலங்கையர்கள் அகதிகளாக வாட வேண்டிய அவசியமில்லை! – தமிழக முதல்வரின் கோரிக்கைக்கு நாமல் ராஜபக்ஷ வரவேற்பும், ஆலோசனையும்!

தமிழக முகாம்களில் உள்ள 89,000 இலங்கையர்களுக்கு இந்தியக் குடியுரிமை அல்லது நீண்டகால விசா வழங்கக் கோரி...

image 1200x800 16
செய்திகள்இலங்கைபிராந்தியம்

2026-இல் 19 நாட்களுக்கு மதுபான விற்பனைக்குத் தடை! – மதுவரித் திணைக்களம் அதிரடி அறிவிப்பு!

2026-ஆம் ஆண்டில் பௌர்ணமி தினங்கள் மற்றும் தேசிய விடுமுறை நாட்கள் உட்பட மொத்தம் 19 நாட்களுக்கு...

image 1200x800 26
செய்திகள்அரசியல்இலங்கை

AI-யால் உலகை வெல்வோம்! – இந்தியப் பிரதமரின் அழைப்பின் பேரில் நாளை டெல்லி செல்கிறார் ஜனாதிபதி அநுர!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் விசேட அழைப்பை ஏற்று, புதுடெல்லியில் நடைபெறவுள்ள ‘இந்தியா – AI...

image 1200x800 14
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வாகன விலைகள் குறையவே வாய்ப்பு! – வரி அதிகரிப்புச் செய்திகளை மறுக்கும் நிதி அமைச்சு; விற்பனையாளர்களின் தந்திரம் அம்பலம்!

இலங்கையில் வாகன இறக்குமதி வரி அதிகரிக்கப்பட்டுள்ளதாகப் பரப்பப்படும் செய்திகள் முற்றிலும் அடிப்படையற்றவை என்றும், இது பொதுமக்களிடையே...