image 51f920dc30
இலங்கைசெய்திகள்

இனி பணிப்பெண்கள் கிடையாது!!

Share

இலங்கையைச் சேர்ந்த பெண் தொழிலாளர்களை வீட்டுப் பணிப்பெண்களாக அனுப்புவது அடுத்த வருடம் மார்ச் மாதம் முதல் நிறுத்தப்படும் என்று தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார, திங்கட்கிழமை (19) தெரிவித்தார்.

சர்வதேச தரத்துக்கு அமைய இலங்கையர்களை உள்நாட்டு உதவியாளர்களாக வெளிநாடுகளுக்கு அனுப்பும் வேலைத்திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.

வெளிநாட்டில் வாழும் இலங்கையர்களுக்கு வாகன இறக்குமதி அனுமதிப்பத்திரம், ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட பல திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும் என்றும் குறிப்பிட்டார்.

வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக சட்டரீதியில் இலங்கையர்கள் செல்வதை உறுதிப்படுத்தவும், அவர்களின் வருமானத்தை சட்டரீதியாக நாட்டுக்கு அனுப்பவும் நடவடிக்கை எடுக்கப்படும் – என்றார்.

நாட்டின் வரலாற்றில் முதல் தடவையாக, 2022 ஆம் ஆண்டில் 3 இலட்சத்துக்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்த பணியார்களை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் பதிவுசெய்து வசதிகளை வழங்கியதாகவும் சுட்டிக்காட்டினார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder Recovered Recovered Recovered 19
இலங்கைசெய்திகள்

கஹவத்தையில் கடும் பதற்றம்! பொதுமக்கள் மீது கண்ணீர் புகைத் தாக்குதல் நடத்தும் பொலிஸார்

கஹவத்தையில் பொலிஸார் மற்றும் பொதுமக்களுக்கு இடையில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக அங்கு கடும் பதற்றமான சூழல்...

Murder Recovered Recovered Recovered 17
இலங்கைசெய்திகள்

எமக்கு தொடர்பில்லை! செம்மணி அவலத்தில் இருந்து பொறுப்பு துறக்கும் அமைச்சர்

செம்மணி புதைகுழி சம்பவங்களுக்கும் தனது கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...