maithripala sirisena
அரசியல்இலங்கைசெய்திகள்

கோட்டாவுடன் இனி எந்த உறவும் கிடையாது! – நாம் மக்கள் பக்கமே என்கிறார் மைத்திரி

Share

” ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசுடன் எமக்கு இனி எவ்வித உறவும் கிடையாது. ராஜபக்சக்கள் வேண்டாம் என போராடும் மக்கள் பக்கம்தான் நாம் நிற்கின்றோம்.” – என்று ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன அறிவித்தார்.

சுதந்திரக்கட்சி தலைமையகத்தில் கொழும்பு மாவட்ட அமைப்பாளர்களுடன் இன்று நடைபெற்ற சந்திப்பின்போதே அவர் இவ்வாறு அறிவிப்பு விடுத்தார்.

” அரசுக்கு ஆதரவு வழங்குவது தொடர்பில் சாந்த பண்டார என்னிடம் எதுவும் கலந்துரையாடவில்லை. ஏன்! தொலைபேசி வாயிலாகக்கூட உரையாற்றவில்லை. தனது அரசியல் வாழ்க்கையை அவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். மூழ்கும் கப்பலில் ஏறியுள்ளார்.

ராஜபக்சக்களுடன் எமக்கு இனி தொடர்பு – உறவு கிடையாது. கடிதம் அனுப்பினோம், யோசனைகளை முன்வைத்தோம். ஆனால் மாறுவதாக தெரியவில்லை.

எனவே, ராஜபக்சக்களை வெளியேற கோரி போராடும் மக்கள் பக்கம்தான் நாம் நிற்கின்றோம். ” – என்றும் மைத்திரிபால சிறிசேன கூறினார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 6 2
செய்திகள்இலங்கை

வாகன இறக்குமதி நிலையான மட்டத்தை அடைந்தது; டொலர் கையிருப்பு உயரும்: மத்திய வங்கி ஆளுநர் நம்பிக்கை!

இலங்கையில் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் வாகன இறக்குமதி குறிப்பிடத்தக்க அளவில் நிலையான மட்டத்தை அடைந்துள்ளதாக,...

1763816381 road 6
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மண்சரிவு அபாயம் காரணமாக கொழும்பு-கண்டி பிரதான வீதி மீண்டும் மூடப்படுகிறது!

கொழும்பு – கண்டி பிரதான வீதி இன்று (நவம்பர் 26) இரவு 10 மணி முதல்...

MediaFile 21
செய்திகள்இலங்கை

யாழ்ப்பாணம் நாவாந்துறையில் 290 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் 5 சந்தேகநபர்கள் கைது!

யாழ்ப்பாணம் – நாவாந்துறைப் பகுதியில் நேற்றிரவு மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது, ஐஸ் (Ice) போதைப்பொருளுடன் 5 சந்தேகநபர்கள்...

6.WhatsApp Image 2024 11 20 at 09.04.56
இலங்கைஅரசியல்செய்திகள்

மீனவர்களைப் பாதுகாப்போம், கடற்றொழில் துறையை நவீனமயமாக்குவோம்: அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் உறுதி!

இலங்கை மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு வருவதாகவும், அவர்களை நிச்சயம் பாதுகாப்பதாகவும் கடற்றொழில், நீரியல் மற்றும்...