நாடாளுமன்றத்தில் இனியும் மோதல் சம்பவங்கள் இடம்பெறக்கூடாது. இதனை உறுதிப்படுத்தும் விதத்தில் சபாநாயகரால் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.” – என்று நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகா இன்று சபையில் சுட்டிக்காட்டினார்.
” நாடாளுமன்றத்தில் இம்முறை நடக்கும், கடந்தமுறை நடந்த சம்பவங்கள் தொடர்பில் அனைவருக்கும் தெரியும்.
அவை பற்றி கதைப்பதில், விவாதம் நடத்துவதில் பயன் இல்லை. எனவே, இனியும் அவ்வாறு நடக்காமல் இருப்பதை உறுதி செய்வதே சிறந்தது.” எனவும் பொன்சேகா குறிப்பிட்டார்.
அதேவேளை, கடந்த இரு நாட்களாக சபை அமர்வுகளை புறக்கணித்திருந்த ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் இன்று சபை அமர்வில் கலந்துகொண்டனர்.
#SrilankaNews
Leave a comment