IMG 20220603 WA0005
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

5 மாதங்களாக எரிவாயு இல்லை!! – மக்கள் போராட்டம்

Share

ஐந்து மாதங்களாக சமையல் எரிவாயு இன்றி தாம் பரிதவிப்பதாகவும், எனவே, தங்களுக்கு கூடியவிரைவில் சமையல் எரிவாயுவை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியும் நோர்வூட், புளியாவத்தை கடைவீதியில் வசிக்கும் மக்கள், இன்று (03) போராட்டத்தில் குதித்தனர்.

அட்டன் – சாஞ்சிமலை பிரதான வீதியை மறித்து, வீதி நடுவே ‘வெற்று’ சமையல் எரிவாயு சிலிண்டர்களை அடுக்கி வைத்து, பதாகைகளை தாங்கியும், கோஷங்களை எழுப்பியும் மக்கள் தமது போராட்டத்தை முன்னெடுத்தனர்.

இதனால் அவ்வீதி ஊடான போக்குவரத்து முற்றாக ஸ்தம்பிதமடைந்தது. அட்டனில் இருந்து சாஞ்சிமலை, பொகவந்தலாவை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்வதற்கு வந்த மக்கள் நீண்ட நேரம் வாகங்களில் காத்திருந்தனர். பலர் மாற்று வழிகளைத்தேடி திரும்பி சென்றனர். பொலிஸாரும் குவிக்கப்பட்டிருந்தனர்.

“எங்களுக்கு கடந்த ஐந்து மாதங்களாக சமையல் எரிவாயு விநியோகிக்கப்படவில்லை. மண்ணெண்ணையும் பகிரப்படவில்லை. நகரப்பகுதி என்பதால் விறகடுப்பு பயன்படுத்துவதிலும் ஆயிரம் தடைகள்.

இந்நகரில் லிற்றோ சமையல் எரிவாயு முகவர்கள் மூவர் இருக்கின்றனர். அவர்களுக்கு குறித்த நிறுவனத்தால் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்படவில்லை. இதனால் நாம் எல்லா வழிகளிலும் துன்பப்படுகின்றோம். எனவே, சமையல் எரிவாயுவை விரைவில் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.” என போராட்டத்தில் பங்கேற்றவர்கள் தெரிவித்தனர்.

அத்துடன், சமையல் எரிவாயுவைக்கூட விநியோகிக்க முடியாமல் திண்டாடும் அரசுக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பினர்.

எரிவாயு வழங்குவதற்கான கூப்பன் தமக்கு வழங்கப்படாமைக்கும் எதிர்ப்பை பதிவுசெய்தனர்.

நிலைமையை கட்டுப்படுத்துவதற்கு நோர்வூட் பொலிஸார் முற்பட்டனர். எதிர்வரும் 08 ஆம் திகதிக்கு பிறகு சமையல் எரிவாயுவை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதனையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. போக்குவரத்து நடவடிக்கையும், வழமைக்கு திரும்பியது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
574922858 1463456808471913 8345646138916257300 n
செய்திகள்அரசியல்இலங்கை

டிட்வா நிவாரணம்: இதுவரை 3 இலட்சம் வீடுகளுக்கு தலா 25,000 ரூபாய் வழங்கீடு!

‘டிட்வா’ சூறாவளியால் பாதிக்கப்பட்ட வீடுகளைச் சீரமைப்பதற்காக அரசாங்கத்தால் வழங்கப்படும் 25,000 ரூபாய் ஆரம்பக் கொடுப்பனவு, இதுவரை...

image b726ec86c8
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஹட்டன் – டிக்கோயாவில் அனைத்து கட்டுமானங்களுக்கும் உடனடித் தடை: மீறினால் கடும் நடவடிக்கை!

‘டிட்வா’ சூறாவளியைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள மண்சரிவு மற்றும் பாதுகாப்பு அபாயங்களைக் கருத்திற்கொண்டு, ஹட்டன்-டிக்கோயா நகர சபை...

25 687ca2a2564c6
செய்திகள்அரசியல்இலங்கை

2026-ல் ஆசிரியர் வெற்றிடங்கள் நிரப்பப்படும் – பிரதமர் ஹரிணி அமரசூரிய உறுதி!

குறிப்பிட்ட சிலருக்கு மாத்திரம் சுகபோகங்களையும் சலுகைகளையும் பெற்றுக்கொடுப்பது இந்த அரசாங்கத்தின் கொள்கையல்ல என பிரதமர் ஹரிணி...

gen z and workplace boundaries ai image
செய்திகள்இந்தியா

‘Gen Z’ பணியாளர்கள் மத்தியில் பரவும் ‘மௌன விலகல்’!

இந்தியாவின் தற்போதைய இளம் பணியாளர்கள் (Gen Z) மத்தியில் ‘மௌன விலகல்’ (Silent Resignation) அல்லது...