24
இலங்கைசெய்திகள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் எரிபொருள் தட்டுப்பாடு இல்லை: அரசாங்க அதிபர் அறிவிப்பு

Share

மட்டக்களப்பு மாவட்டத்தில் எரிபொருள் தட்டுப்பாடு இல்லை என மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.ஜே. முரளிதரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் பல எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மக்கள் அதிகமாக காணப்படுவது தொடர்பாக மாவட்ட அரசாங்க அதிபரிடம் வினவிய போது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இன்று எரிபொருளைப்பெற்றுக்கொள்வதற்கு நீண்ட வரிசையில் மக்கள் காத்திருப்பதை காணமுடிகின்றது.

ஈரான் – இஸ்ரேல் மோதல் நிலைமைகள் காரணமாக இலங்கையில் பெற்றோல் தட்டுப்பாடுகள் ஏற்படலாம் என்ற அச்சம் காரணமாக மக்கள் பெற்றோல் நிரப்பு நிலையங்களில் முண்டியடிப்பதை காண முடிகின்றது.

மட்டக்களப்பு நகரில் உள்ள அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் மக்கள் நீண்ட வரிசையில் நின்று எரிபொருளைப் பெற்றுக்கொள்வதை காண முடிகின்றது.

இந்தநிலையிலேயே, எவ்விதமான எரிபொருள் தட்டுப்பாடும் இல்லை.மக்கள் வீணாகச் சென்று மக்கள் வரிசையில் நிற்க வேண்டாம் என மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.ஜே. முரளிதரன் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
20
இலங்கைசெய்திகள்

இந்திய பாதுகாப்பு ஒப்பந்தத்தை இரகசியமாக கையாளும் அரசாங்கம்!

இந்தியப் பிரதமரின் இலங்கை விஜயத்தின் போது கையெழுத்திடப்பட்ட பாதுகாப்பு ஒப்பந்தத்தை பொதுமக்களுக்கு வெளியிட முடியாது என்று...

19
இலங்கைசெய்திகள்

மனிதர்களும் யானைகளும் ஒன்றாக வாழும் நிலப்பரம்பல் : அதிர்ச்சிக்குள்ளாக்கும் ஆய்வுகள்

இலங்கையில் 44 வீத நிலப்பரப்பில் மனிதர்களும் யானைகளும் ஒன்றாக வசிப்பதாக ஆய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த...

18
இலங்கைசெய்திகள்

திருகோணமலை கடற்படை தள நிலத்தடி சிறைகள் : முன்னாள் கடற்படைத் தளபதியின் அதிர்ச்சி வாக்குமூலம்

திருகோணமலை கடற்படை தள நிலத்தடி சிறைகளில் தனிநபர்களை சட்டவிரோதமாக தடுத்து வைத்திருந்தமை தொடர்பாக குற்றப் புலனாய்வுத்...

16
இலங்கைசெய்திகள்

அரசியல்வாதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள எச்சரிக்கை கடிதங்கள்

25 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் 100 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எச்சரிக்கை கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன....