world bank 20220162151
இலங்கைசெய்திகள்

நிதி உதவி கிடையாது! – உலக வங்கி கைவிரிப்பு

Share

உலக வங்கியிடம் இருந்து இலங்கைக்கு நிதி உதவிகள் வழங்கப்படவுள்ளதாக சில அறிக்கைகள் வெளியாகியுள்ள நிலையில் அதனை மறுத்துள்ள உலக வங்கி, முறையான பொருளாதாரக் கொள்கை கட்டமைப்பை உருவாக்கும் வரை, இலங்கைக்கு புதிய நிதியுதவியை வழங்கத் திட்டமிடவில்லை என நேற்று (30) மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பில் கருத்து வௌயிட்டுள்ள மாலைத்தீவுகள், நேபாளம் மற்றும் இலங்கைக்கான உலக வங்கியின் இயக்குநர் , உலக வங்கி குறிப்பிட்ட தொகை நிதி உதவியை வழங்குவதாக ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்தி தவறானது என சுட்டிக்காட்டியுள்ளார்.

“குறிப்பாக அடுத்த சில மாதங்களில் இலங்கைக்கு 700 மில்லியன் அமெரிக்க டொலரை வழங்குவதாக கொழும்பில் உள்ள உலக வங்கியின் முகாமையாளர் சியோ கண்டா கூறியதாக, இலங்கையின் வெளிவிவகார அமைச்சின் அறிக்கை குறிப்பிட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ள அவர், குறிப்பிட்ட எண்ணிக்கையிலான உடனடி நிவாரணங்களை உலக வங்கி வழங்கவுள்ளதாக அண்மைய அறிக்கைகளில் அவதானிக்க முடிகின்ற போதிலும் இது துல்லியமான அறிக்கை அல்ல எனவும் குறிப்பிட்டுள்ளார்.

” நாங்கள் இலங்கை மக்கள் மீது அக்கறை கொண்டுள்ளோம். அத்துடன், அபிவிருத்தி பங்காளிகளுடன் நெருக்கமாகப் பணியாற்றி வருகிறோம். தற்போதுள்ள திட்டங்களில் இருந்து சில ஆதாரங்களை நாங்கள் மீண்டும் உருவாக்குகிறோம். மேலும் பொருளாதார ஸ்திரத்தன்மையை மீட்டெடுப்பதற்கான கொள்கைகள் குறித்து ஆலோசனை வழங்குகிறோம். கடந்த கால கொள்கைகளை மாற்றியமைக்க உதவுகிறோம். எனினும் போதுமான முறையான பொருளாதாரக் கொள்கை கட்டமைப்பை உருவாக்கும் வரை, இலங்கைக்கு புதிய நிதியுதவியை வழங்க உலக வங்கிbதிட்டமிடவில்லை” என்று அவர் கூறினார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
articles2FVR2hd2cLIcHfFF66K3BB
செய்திகள்அரசியல்இலங்கை

மலையகமே எமது தாயகம்; வடக்கு, கிழக்குக்குச் செல்லத் தயாரில்லை – சபையில் வேலுசாமி ராதாகிருஷ்ணன் எம்.பி. முழக்கம்!

மலையக மக்கள் தமது தாயகமாக மலையகத்தையே கருதுவதாகவும், அங்கிருந்து இடம்பெயர்ந்து வடக்கு அல்லது கிழக்கு மாகாணங்களுக்குச்...

images 4 5
செய்திகள்இலங்கை

சம்பா, கீரி சம்பா அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படலாம்: அமைச்சர் வசந்த சமரசிங்க எச்சரிக்கை!

‘டிட்வா’ (Ditwa) சூறாவளி காரணமாக நாட்டின் விவசாயத் துறை பாரிய பின்னடைவைச் சந்தித்துள்ளதாகவும், இதன் விளைவாக...

death ele
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

அநுராதபுரத்தில் சோகம்: காட்டு யானைத் தாக்குதலில் 48 வயது விவசாயி பலி; நண்பர்கள் உயிர் தப்பினர்!

அநுராதபுரம், தம்புத்தேகம பகுதியில் தனது விவசாய நிலத்தைப் பாதுகாக்கச் சென்ற விவசாயி ஒருவர் காட்டு யானைத்...

images 3 6
செய்திகள்அரசியல்இலங்கை

ஜனவரி 6 வரை பாராளுமன்றம் ஒத்திவைப்பு: உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்களுக்கு நீண்ட விடுமுறை!

இலங்கை பாராளுமன்றத்தின் அமர்வுகள் எதிர்வரும் ஜனவரி மாதம் 06 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில்,...