வர்த்தமானி அறிவித்தல் ஊடாக முட்டைக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு விலையில் எவ்வித மாற்றமும் இடம்பெறாது – என்று வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
அத்துடன், முட்டை உற்பத்தியாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
#SriLankaNews