அரசியல்இலங்கைசெய்திகள்

தனிநபர் முடிவுகளுக்கு இடமில்லை! – கட்சியாக கலந்துரையாடியே முடிவுகள் என்கிறார் ஜீவன் தொண்டமான்

Photo 1
Share

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் என்பது ஜனநாயகமிக்க அமைப்பாகும். எனவே, தனிநபர் முடிவுகளுக்கு அப்பால் கட்சியாக கலந்துரையாடியே முடிவுகள் எடுக்கப்படும் – என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தேசிய சபைக் கூட்டம் இன்று முற்பகல் கொட்டகலையிலுள்ள சி.எல்.எவ் வளாகத்தில் நடைபெற்றது.

இதன் பின் செய்தியாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” இலங்கைத் தொழிலாளர் காங்கிரசுக்கு இளம் தலைவர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். தலைவர் ஆறுமுகன் தொண்டமான் இருந்தபோது தனிநபராக முடிவுகள் எடுக்கப்பட்டன. ஆனால் கட்சிக்கென மூத்த சட்டத்தரணிகள் உள்ளனர், போஷகர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களுடன் கலந்துரையாடி – கட்சியாகவே இனி முடிவுகள் எடுக்கப்படும்.

அரசியல் மற்றும் தொழிற்சங்கங்களுக்கு யாப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. அதிகாரங்கள் உரியவகையில் பகிரப்பட்டுள்ளன. இளைஞர்கள் உள்வாங்கப்பட்டுள்ளனர்.

தேசிய சபைக்கு கணக்கு, வழக்கு காண்பிக்கப்பட்டுள்ளது. நாம் அரசியல் செய்தாலும் தொழிங்சங்கம்தான் பிரதானமானது. ஏனைய தொழிற்சங்கங்கள், தொழிற்சங்கம் என்ற போர்வையில் அரசியலையே செய்கின்றன. முடித்தால் கணக்கு வழக்கை காட்டட்டும்.” – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
8 10
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்றத்தில் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட அர்ச்சுனா

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதற்காக நாடாளுமன்ற...

10 10
இலங்கைசெய்திகள்

ரணிலின் வெளிநாட்டு பயணங்களால் ஏற்பட்ட செலவு : அமைச்சர் வெளியிட்ட தகவல்

ஜனாதிபதியாக இருந்த காலத்தில் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களுக்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 1.27 பில்லியன் ரூபா...

6 11
உலகம்செய்திகள்

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்கியதில் 13 இந்தியர்கள் பலி

காஷ்மீர்(Kasmir) மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் இராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் 13 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர்....

9 10
இலங்கைசெய்திகள்

விமான சேவையை நிறுத்தும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

இந்தியா – பாகிஸ்தான் போர் தீவிரம் அடைந்துள்ள நிலையில், பாகிஸ்தானுக்கான விமான சேவைகளை தற்காலிகமாக இடைநிறுத்துவதாக...