download 1 3
அரசியல்இலங்கைசெய்திகள்

அபிலாஷைகளை நிறைவேற்றும் வகையில் 22 ஆவது திருத்தம் இல்லை!

Share

மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றும் வகையில் அரசியலமைப்பிற்கான 22 ஆவது திருத்தச்சட்டமூலம் அமையவில்லை – என்று இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் தெரிவித்தார்.

சட்டத்தரணிகள் சங்கத்தில் இன்று (08) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.

” நாட்டில் ‘சிஸ்டம் சேஜ்’சையே மக்கள் கோருகின்றனர். அதற்கான ஏற்பாடு அரசால் முன்வைக்கப்பட்டுள்ள 22 ஆவது திருத்தச்சட்டமூலத்தில் இல்லை என்பதே சட்டத்தரணிகள் சங்கத்தின் நிறைவேற்றுக்குழுவின் கருத்தாக இருக்கின்றது.” – எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

எனவே, அரசியல் மற்றும் பொருளாதார உறுதிப்பாட்டை ஏற்படுத்த வேண்டுமெனில் 22 ஆவது திருத்தச்சட்டமூலம், திருத்தியமைக்கப்பட வேண்டும் எனவும் சாலிய பீரிஸ் வலியுறுத்தினார்.

அதேவேளை, அரசியலமைப்பிற்கான 22 ஆவது திருத்தச்சட்டமூலம் ஏற்றுக்கொள்ளும் வகையில் இல்லை என பிரதான எதிர்க்கட்சிகளும் அறிவித்துள்ளன.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 24
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தொழிலதிபர்களுக்கு நில வங்கி: அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி புதிய அறிவிப்பு!

இலங்கையில் புதிய தொழில் முயற்சிகளை ஊக்குவிக்கவும், முதலீட்டாளர்களுக்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை எளிதாக்கவும் ‘நில வங்கி’...

Untitled 23
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாடாளுமன்ற பிரதி பொதுச்செயலாளர் சமிந்த குலரத்னவின் மனு: ஜூன் 02 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

நாடாளுமன்றத்தின் பதவி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள பிரதிப் பொதுச்செயலாளர் சமிந்த குலரத்னவினால் தாக்கல் செய்யப்பட்ட ரீட் (Writ)...

Untitled 22
செய்திகள்இலங்கை

இலங்கை – ரஷ்யா இடையிலான உயர்மட்டப் பேச்சுவார்த்தை: ரஷ்யப் பிரதி வெளிவிவகார அமைச்சர் வருகை!

இலங்கை மற்றும் ரஷ்யாவிற்கு இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், ரஷ்யக் கூட்டமைப்பின் பிரதி...

Untitled 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

புத்தாண்டு காலத்தில் தட்டுப்பாடின்றி கோழி இறைச்சி: விலையைச் சீராகப் பேண நடவடிக்கை!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு காலப்பகுதியில் சந்தையில் கோழி இறைச்சிக்கு எவ்வித தட்டுப்பாடும் ஏற்படாத வகையில்...